ETV Bharat / state

கரோனா ஊரடங்கு - விழுப்புரத்தில் 13 ஆயிரத்தை நெருங்கும் வழக்குகள்!

author img

By

Published : Jun 3, 2020, 12:29 AM IST

விழுப்புரம்: மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 13 ஆயிரத்தை இவ்வழக்குகள் நெருங்குகின்றன.

More than 12 Thousand cases registered in Villupuram
More than 12 Thousand cases registered in Villupuram

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (02.06.2020) மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 185 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேற்படி ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை (02.06.2020) மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,874 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 8,247 இருசக்கர வாகனங்கள், 232 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 261 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (02.06.2020) மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 185 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேற்படி ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை (02.06.2020) மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,874 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 8,247 இருசக்கர வாகனங்கள், 232 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 261 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.