ETV Bharat / state

பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு : ஸ்டாலின் அதிரடி

author img

By

Published : Mar 26, 2021, 12:59 PM IST

Updated : Mar 26, 2021, 2:05 PM IST

நேற்று (மார்ச் 25) செஞ்சியில் திண்டிவனம், செஞ்சி, மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டச்செய்திகள், செஞ்சி, பழனிசாமி விவசாயி அல்ல விஷவாயு, MK Stalin attacks Edappadi palanisamy in election campaign at Gingee, Gingee, MK Stalin, Edappadi Palanisamy
mk-stalin-attacks-edappadi-palanisamy-in-election-campaign-at-gengee

விழுப்புரம்: செஞ்சியில் திமுக வேட்பாளர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் நேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

"குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இங்குள்ள வேட்பாளர்களும் முகக்கவசம் அணியவில்லை. இப்போது சொல்லும்போது தான் அணிகிறார்கள். நான் ஏன் அணியவில்லை என்று கேட்கிறீர்களா ? நான் உயரத்தில், தூரத்தில் உள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பில்லை. லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகிவிடும்.

தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம். கரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போது சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா ஏற்பட்டு உயிரிழந்தார்.

செஞ்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

அரசுப் பணத்தை தேர்தலுக்காக செலவிடும் ஆட்சி தற்போது நடந்துவருகிறது. விலைவாசியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரையை தவிர தேவையற்ற பொருள்களை மக்களிடம் திணிக்கிறார்கள்.

பழனிசாமி எங்கு சென்றாலும் தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்லிவருகிறார். அவர் போலி விவசாயி. பச்சை துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா ?. எனக்கு விவசாயிகளை பிடிக்கும். போலி விவசாயிகளை பிடிக்காது.

பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவர்களையும் பிடிக்காது. நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பீர்களா? டெல்லியில் போராடும் விவசாயிகளை புரோக்கர் என கொச்சைப்படுத்தும் நீங்கள் விவசாயியா? நீங்கள் விவசாயி அல்ல; விஷவாயு. இந்த விஷவாயுவுக்கு முடிவுகட்டும் நாள்தான் ஏப்ரல் 6ஆம் தேதி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதுதான் முதல் தீர்மானமாக இருக்கும். அதிமுக தேர்தலுக்கு பின் எதிர்கட்சியாகக் கூட உட்கார முடியாது. தமிழை அழிக்கவும், இந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை கொண்டுவந்து மதவாத அரசியலை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. இங்குள்ள அதிமுக அதற்கு துணை போகிறது. இதற்கு திமுக தலைமையிலான கூட்டணி விடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது?

விழுப்புரம்: செஞ்சியில் திமுக வேட்பாளர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் நேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

"குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இங்குள்ள வேட்பாளர்களும் முகக்கவசம் அணியவில்லை. இப்போது சொல்லும்போது தான் அணிகிறார்கள். நான் ஏன் அணியவில்லை என்று கேட்கிறீர்களா ? நான் உயரத்தில், தூரத்தில் உள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பில்லை. லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகிவிடும்.

தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம். கரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போது சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா ஏற்பட்டு உயிரிழந்தார்.

செஞ்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

அரசுப் பணத்தை தேர்தலுக்காக செலவிடும் ஆட்சி தற்போது நடந்துவருகிறது. விலைவாசியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரையை தவிர தேவையற்ற பொருள்களை மக்களிடம் திணிக்கிறார்கள்.

பழனிசாமி எங்கு சென்றாலும் தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்லிவருகிறார். அவர் போலி விவசாயி. பச்சை துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா ?. எனக்கு விவசாயிகளை பிடிக்கும். போலி விவசாயிகளை பிடிக்காது.

பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவர்களையும் பிடிக்காது. நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பீர்களா? டெல்லியில் போராடும் விவசாயிகளை புரோக்கர் என கொச்சைப்படுத்தும் நீங்கள் விவசாயியா? நீங்கள் விவசாயி அல்ல; விஷவாயு. இந்த விஷவாயுவுக்கு முடிவுகட்டும் நாள்தான் ஏப்ரல் 6ஆம் தேதி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதுதான் முதல் தீர்மானமாக இருக்கும். அதிமுக தேர்தலுக்கு பின் எதிர்கட்சியாகக் கூட உட்கார முடியாது. தமிழை அழிக்கவும், இந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை கொண்டுவந்து மதவாத அரசியலை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. இங்குள்ள அதிமுக அதற்கு துணை போகிறது. இதற்கு திமுக தலைமையிலான கூட்டணி விடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது?

Last Updated : Mar 26, 2021, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.