ETV Bharat / state

டாம்கோ கடன்பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம்: சிறுபான்மை சமூகத்தினர்கள் டாம்கோ (Tomco Loan Scheme) கடன்பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 11, 2020, 4:22 AM IST

Minorities can apply Tomco loan says Villupuram collector
Minorities can apply Tomco loan says Villupuram collector

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறு தொழில் கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளவும் விரும்புபவர்கள் கடன் உதவி பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சுய உதவிக் குழுக்களுக்கான கடன்பெற குழுவின் 60 விழுக்காடு சிறுபான்மை இனத்தவரும், 40 விழுக்காடு பிற இனத்தவரும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ஒருலட்சத்து இருபதாயிரம் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்திலோ, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இருப்பிடம், ஜாதி, வருமானச் சான்று, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் வங்கிகோரும் இதர ஆவணங்களை இணைத்து அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் கரோனாவால் 192 பேர் பாதிப்பு!

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறு தொழில் கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளவும் விரும்புபவர்கள் கடன் உதவி பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சுய உதவிக் குழுக்களுக்கான கடன்பெற குழுவின் 60 விழுக்காடு சிறுபான்மை இனத்தவரும், 40 விழுக்காடு பிற இனத்தவரும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ஒருலட்சத்து இருபதாயிரம் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்திலோ, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இருப்பிடம், ஜாதி, வருமானச் சான்று, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் வங்கிகோரும் இதர ஆவணங்களை இணைத்து அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் கரோனாவால் 192 பேர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.