ETV Bharat / state

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி சிறையில் அடைப்பு!

author img

By

Published : Jul 7, 2020, 10:20 PM IST

விழுப்புரம்: ஆரோவில் அருகே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி சிறையில் அடைப்பு!
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி சிறையில் அடைப்பு!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் டான் திருநாவுக்கரசு (28). இவர் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிபறி மற்றும் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சிறையில் இருந்த டான் திருநாவுக்கரசு அண்மையில் பிணையில் வெளியில் வந்து, தொடர்ந்து தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று டான் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல்துறையினர் இன்று(ஜூலை.7) அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் டான் திருநாவுக்கரசு (28). இவர் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிபறி மற்றும் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சிறையில் இருந்த டான் திருநாவுக்கரசு அண்மையில் பிணையில் வெளியில் வந்து, தொடர்ந்து தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று டான் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல்துறையினர் இன்று(ஜூலை.7) அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.