ETV Bharat / state

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Nov 3, 2020, 11:15 AM IST

விழுப்புரம்: மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Liquor dealer arrested
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் என்கிற பாலசுந்தர். இவர் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பாலசுந்தர் மீது நிலுவையில் உள்ளன.

எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று பாலசுந்தரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல் துறையினர் பாலசுந்தரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் நின்ற காரில் திடீர் தீ விபத்து!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் என்கிற பாலசுந்தர். இவர் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பாலசுந்தர் மீது நிலுவையில் உள்ளன.

எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று பாலசுந்தரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல் துறையினர் பாலசுந்தரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் நின்ற காரில் திடீர் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.