ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் போதைப் பொருளால் ஏற்படும் நோய்கள் குறித்தும், உயிர் சேதங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைதொடர்ந்து தலைக்கவசம் உயிர்கவசம் மட்டுமல்ல; எதிர்கால தலைமுறைக்கான உயரிய கவசம் என்பதை வலியுறுத்தி, ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.