ETV Bharat / state

ஓட்டுநர் தூங்கியதால் ஓடைப் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: 4 பேர் மரணம்! - Four die as car topples in viluppuram

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநர் காரை இயக்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓடைப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

car accident
author img

By

Published : Sep 13, 2019, 1:29 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக மாருதி சுசூகி காரில் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றார்.

கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாக துருகம் புறவழிச் சாலையில் சென்றது. அப்போது, கார் ஓட்டுநர் சிவக்குமார் தூங்கியதால் நிலைதடுமாறிய சுசூகி கார் கவிழ்ந்து அருகேயிருந்த 15 அடி பாலத்தின் ஓடைப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தியாக துருவம் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் ஏழுமலை, பாலாஜி, சித்ரா, ஜெயக்கொடி ஆகிய நான்கு பேர் இறந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக மாருதி சுசூகி காரில் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றார்.

கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாக துருகம் புறவழிச் சாலையில் சென்றது. அப்போது, கார் ஓட்டுநர் சிவக்குமார் தூங்கியதால் நிலைதடுமாறிய சுசூகி கார் கவிழ்ந்து அருகேயிருந்த 15 அடி பாலத்தின் ஓடைப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தியாக துருவம் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் ஏழுமலை, பாலாஜி, சித்ரா, ஜெயக்கொடி ஆகிய நான்கு பேர் இறந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

Intro:tn_vpm_01_thiyagadhurgam_accident_4_death_vis_tn10026_HD


Body:tn_vpm_01_thiyagadhurgam_accident_4_death_vis_tn10026_HD


Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை கார் ஒன்று டிரைவரின் தூக்க கலக்கத்தால் கார் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலே நான்கு பேர் பலி !!


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளம் ஊரைசேர்ந்த ஏழுமலை என்பவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக மாருதி சுசுகி காரில் உறவினர்களை அழைத்து கொண்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிசாலையில் சென்றுகொன்டிருந்ததபோது அதிகாலை 6 மணியளவில் அதிவேக வந்த கார் ட்ரைவர் சிவகுமாரின் தூக்ககலக்கதனால் சாலையில் கவிழ்ந்து அருகே இருந்த 15 அடி பாலத்தின் ஓடைபள்ளத்தில் தலைகுப்பாற கவிழுந்துள்ளது.சம்பவத்தை கேள்விப்பட்ட தியாகதுருகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் சம்பவ இடத்திலே இரண்டு ஆண்,இரண்டு பெண் பலியானார்கள்.இறந்தவர்கள் ஏழுமலை 50,பாலாஜி 40,சித்ரா 42, ஜெயக்கொடி 44, என்பது தெரிய வந்துள்ளது.மேலும் காயமடைந்த ஏழுழுமலையின் மனைவி சாந்தி வயது 47 டிரைவர் சிவக்குமார்49 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவ குறித்து தியாக துருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேர்த்தில் நடந்த சம்பவத்தால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.