ETV Bharat / state

மெய்கண்டார் கோயில் குருபூஜை வழிபாடு: பக்தர்கள் தரிசனம் - devotees offered prayers

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோயிலில் நடைபெற்ற குருபூஜை விழாவில், சிறப்பு மலர் அலங்காரத்தில் மெய்கண்டார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

gurupooja
author img

By

Published : Oct 28, 2019, 11:28 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் சிவஞான போதகத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று (28.10.2019) காலை 8 மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் குருபூஜை நிகழ்ச்சி தொடங்கியது.

gurupoojai
gurupoojai

அதைத் தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் மதியம் 12 மணிக்கு மெய்கண்டாருக்கு தீபாராதனை, குருபூஜைகளும் நடைபெற்றன. பின்னர், 1 மணிக்கு நடைபெற்ற ஆன்மிக சிறப்பு சொற்பொழிவில், சென்னை, மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

gurupoojai
gurupoojai

அப்போது மெய்கண்டார் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், குருபூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் சிவஞான போதகத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று (28.10.2019) காலை 8 மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் குருபூஜை நிகழ்ச்சி தொடங்கியது.

gurupoojai
gurupoojai

அதைத் தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் மதியம் 12 மணிக்கு மெய்கண்டாருக்கு தீபாராதனை, குருபூஜைகளும் நடைபெற்றன. பின்னர், 1 மணிக்கு நடைபெற்ற ஆன்மிக சிறப்பு சொற்பொழிவில், சென்னை, மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

gurupoojai
gurupoojai

அப்போது மெய்கண்டார் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், குருபூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Intro:விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் கோயிலில் குருபூஜை வழிபாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.Body:விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் சிவஞான போதத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை நடப்பது வழக்கம். இதன்பேரில் இன்று (28.10.2019) காலை 8 மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் குருபூஜை நிகழ்ச்சி துவங்கியது.

தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு மெய்கண்டாருக்கு தீபாராதனையும், குருபூஜையும் நடந்தது. மேலும் ஆன்மிக சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.

இதில் மதுரை, கள்ளக்குறிச்சி, நெய்வேலி, சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவபக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

அப்போது மெய்கண்டார் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குருபூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Conclusion:தொடர்ந்து மாலை 7 மணிக்கு வீணை இன்னிசை கச்சேரியும், வள்ளி, திருமண பொம்மலாட்டம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருவீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதின கிளை மட நிர்வாகி திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.