ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கத் தடை! - விழுப்புரம் செய்திகள்

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வருகிற அமாவாசை தினத்தன்று பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்காளம்மன்
அங்காளம்மன்
author img

By

Published : Nov 12, 2020, 7:17 AM IST

இதுதொடர்பாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) அமாவாசை தினத்தன்று மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் அங்காளம்மன் திருக்கோயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனைத்து விதமான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) அமாவாசை தினத்தன்று மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் அங்காளம்மன் திருக்கோயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனைத்து விதமான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.