ETV Bharat / state

சாதிப்பாகுபாடு - குடிக்கும் தண்ணீரில் விஷம் கலப்பு!

author img

By

Published : Jun 9, 2022, 6:29 PM IST

செஞ்சி அருகே சாதிப்பாகுபாடு காரணமாக, மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சாதி பாகுபாடு - குடிக்கும் தண்ணீரில் விஷம் கலப்பு
சாதி பாகுபாடு - குடிக்கும் தண்ணீரில் விஷம் கலப்பு

விழுப்புரம் வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பந்தூர் ஊராட்சியில் மொடையூர், கம்பந்தூர், துடுப்பாக்கம், தையூர் போன்றப் பகுதிகளை இணைக்கும் சாலையில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டேங்கில் இருந்துதான் மொடையூர் பகுதியைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பந்தூர் குடிநீர் டேங்கில் இருந்து, குடிநீர் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் மக்கள் குடிநீர் எடுத்துச்செல்ல வந்தபோது தண்ணீரில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் பூச்சுக்கொல்லி மருந்து நாற்றம் அடிப்பதாக சந்தேகமடைந்தனர்.

பொதுமக்களைக் கொல்ல சதி: இதனால், மக்கள் நீரைக் குடிக்காமல், காவல் துறையினருக்கும், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த நீரினை மக்கள் கீழே கொட்டி டேங்கை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சாதிப்பாகுபாட்டை காரணம்காட்டி, விஷம் வைத்து, பொதுமக்களை கொல்ல சதி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் காமாட்சி புகார் கொடுத்துள்ளார். செஞ்சி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மொடையூர், துடுப்பாக்கம், கம்பந்தூர் போன்ற பகுதி கிராம மக்கள் இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மொடையூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றோம்.

அரசு தலையிட வேண்டும்: பட்டியலின மக்கள் என்பதால் நீங்கள் இந்த குடிநீரை எடுத்து செல்லக்கூடாது. உபயோகிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட சிலர் சில காலமாக சாதியைக் காட்டி மறைமுகமாக மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது குடிநீரில் விஷம் கலந்துள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஷம் கலக்கப்பட்ட செய்தியை அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடந்த அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்தார். உடனடியாக உரிய அலுவலர்களிடம் தொடர்புகொண்டு பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

விஷம் கலந்த அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) உமாசங்கரிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்கள் நாய்க்குட்டியைக் கொன்று அந்த தண்ணீர் தொட்டியில் வீசிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கணவன் மனைவியைக்கொல்வதும்; மனைவி கணவனைக்கொல்வதும் வேதனை அளிக்கிறது - வைகோ உருக்கம்

விழுப்புரம் வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பந்தூர் ஊராட்சியில் மொடையூர், கம்பந்தூர், துடுப்பாக்கம், தையூர் போன்றப் பகுதிகளை இணைக்கும் சாலையில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டேங்கில் இருந்துதான் மொடையூர் பகுதியைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பந்தூர் குடிநீர் டேங்கில் இருந்து, குடிநீர் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் மக்கள் குடிநீர் எடுத்துச்செல்ல வந்தபோது தண்ணீரில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் பூச்சுக்கொல்லி மருந்து நாற்றம் அடிப்பதாக சந்தேகமடைந்தனர்.

பொதுமக்களைக் கொல்ல சதி: இதனால், மக்கள் நீரைக் குடிக்காமல், காவல் துறையினருக்கும், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த நீரினை மக்கள் கீழே கொட்டி டேங்கை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சாதிப்பாகுபாட்டை காரணம்காட்டி, விஷம் வைத்து, பொதுமக்களை கொல்ல சதி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் காமாட்சி புகார் கொடுத்துள்ளார். செஞ்சி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மொடையூர், துடுப்பாக்கம், கம்பந்தூர் போன்ற பகுதி கிராம மக்கள் இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மொடையூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றோம்.

அரசு தலையிட வேண்டும்: பட்டியலின மக்கள் என்பதால் நீங்கள் இந்த குடிநீரை எடுத்து செல்லக்கூடாது. உபயோகிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட சிலர் சில காலமாக சாதியைக் காட்டி மறைமுகமாக மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது குடிநீரில் விஷம் கலந்துள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஷம் கலக்கப்பட்ட செய்தியை அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடந்த அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்தார். உடனடியாக உரிய அலுவலர்களிடம் தொடர்புகொண்டு பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

விஷம் கலந்த அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) உமாசங்கரிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்கள் நாய்க்குட்டியைக் கொன்று அந்த தண்ணீர் தொட்டியில் வீசிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கணவன் மனைவியைக்கொல்வதும்; மனைவி கணவனைக்கொல்வதும் வேதனை அளிக்கிறது - வைகோ உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.