விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள புகழ்பெற்ற MGM மதுபான ஆலையில் நேற்று முதல் ஐடி ரெய்டு நடந்து வரும் நிலையில் இன்று அதிகாலை 8:30 மணியிலிருந்து மதுபான ஆலையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்நிறுவனத்தின் ஊழியர் முக்கிய ஆவணங்களை வயல்வெளிகளில் வீசியதை கண்டுபிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சோததனையின் போது ஊழியர்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:எம்ஜிஎம் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறை சோதனை!