விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட மதுவிலக்கு அமலக்காப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 4) காலை அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி, ஒட்டம்பட்டு கிராமங்களில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, ஒட்டம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது நிலம், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சீனு, கோவிந்தன் ஆகியோர் நிலங்களில் தலா 400 லிட்டர் கொள்ளவு கொண்ட கள்ளச்சாரய ஊறல்கள் கண்டுபிடிக்க்கப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், 100 லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராய ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரே நாளில் 1,300 லிட்டர் அளவிலான ஊறல்களை விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் அழித்தனர்.
இதையும் படிங்க: அரகண்டநல்லூரில் கள்ளச்சாரயம் காய்ச்சியவர்கள் கைது!