ETV Bharat / state

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 21, 2019, 11:38 AM IST

விழுப்புரம்: இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

bus-collision
bus-collision

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 2 மணியளவில் 36 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த உமர் என்பவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்குப் பிணை!

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 2 மணியளவில் 36 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த உமர் என்பவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்குப் பிணை!

Intro:tn_vpm_01_ulunthurpettai_40_person_injury_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_40_person_injury_vis_tn10026.mp4Conclusion:தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 40 பேர் படுகாயம்,ஒருவர் பலி !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே
சென்னையில் இருந்து 36 பயணிகளுடன் கோவை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று அதிகாலை 2 மணியளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது அந்த பஸ் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையிலிருந்து சேர்ந்த நான்கு குறுக்கு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை நோக்கி செல்ல முயன்றபோது கோவையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி சென்ற மற்றொரு ஆம்னி பஸ் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், மேலும் உமர் என்பவர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.