ETV Bharat / state

கத்தி முனையில் காதலன் முன்பாக பெண் கூட்டு பாலியல் வல்லுறவு

author img

By

Published : Jan 23, 2020, 9:23 AM IST

வேலூர்: வேலூர் கோட்டையில் காதலுடன் தனிமையில் இருந்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

gang rape
gang rape

வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் பணிபுரியும் 24 வயது பெண்ணும், 20 வயது இளைஞனும் காதலித்துவந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று இவர்கள் இருவரும் பணியை முடித்து விட்டு, சாரதி மாளிகை எதிரே உள்ள கோட்டை பூங்காவிற்கு இரவு 9.30 மணியளவில் சென்றனர். அப்போது, இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கோட்டைக்குள் போதையில் சுற்றித்திரிந்த மூன்று பேர் கொண்ட கும்பல், காதலனை கத்தி முனையில் மிரட்டி, அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து பெண்ணிடமிருந்த செல்போன், தங்க நகை ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். இதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர். இந்த விசாரணையில், வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அஜித்தை கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈட்டுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது கூட்டாளிகளான, அடா மணிகண்டன் (41), கோழி சக்திவேல் (19) ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணிடம் பறித்த செல்போன், தங்க நகை உள்ளிட்டவற்றை ஆட்டோ ஓட்டுநர் கொய்யா மாரியிடம் (32) கொடுத்தது தெரியவந்தது. கொய்யா மாரியையும் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறார் குற்றவாளியான அஜித் தவிர மற்ற மூன்று குற்றவாளிகளும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

வேலூர் கோட்டை இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கியமான அடையாளமாகும். சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையில் காதலர்கள் என்ற போர்வையில் இளம் ஜோடிகள் அமர்ந்துகொண்டு ஆபாசமான முறையில் நடந்து கொள்வது வாடிக்கையாகியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற இதுஒரு முன்னுதாரணமாக அமையும் எனவும் கூறுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் - கெஜ்ரிவால்

வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் பணிபுரியும் 24 வயது பெண்ணும், 20 வயது இளைஞனும் காதலித்துவந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று இவர்கள் இருவரும் பணியை முடித்து விட்டு, சாரதி மாளிகை எதிரே உள்ள கோட்டை பூங்காவிற்கு இரவு 9.30 மணியளவில் சென்றனர். அப்போது, இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கோட்டைக்குள் போதையில் சுற்றித்திரிந்த மூன்று பேர் கொண்ட கும்பல், காதலனை கத்தி முனையில் மிரட்டி, அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து பெண்ணிடமிருந்த செல்போன், தங்க நகை ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். இதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர். இந்த விசாரணையில், வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அஜித்தை கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈட்டுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது கூட்டாளிகளான, அடா மணிகண்டன் (41), கோழி சக்திவேல் (19) ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணிடம் பறித்த செல்போன், தங்க நகை உள்ளிட்டவற்றை ஆட்டோ ஓட்டுநர் கொய்யா மாரியிடம் (32) கொடுத்தது தெரியவந்தது. கொய்யா மாரியையும் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறார் குற்றவாளியான அஜித் தவிர மற்ற மூன்று குற்றவாளிகளும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

வேலூர் கோட்டை இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கியமான அடையாளமாகும். சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையில் காதலர்கள் என்ற போர்வையில் இளம் ஜோடிகள் அமர்ந்துகொண்டு ஆபாசமான முறையில் நடந்து கொள்வது வாடிக்கையாகியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற இதுஒரு முன்னுதாரணமாக அமையும் எனவும் கூறுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் - கெஜ்ரிவால்

Intro:வேலூர் மாவட்டம்

காதலனை நம்பி சென்ற பெண் கும்பல் பாலியல் தொல்லையால் சீரழிந்த கொடூரம்

# வேலூர் கோட்டையில் தொடரும் ஆபாச வன்முறைகள்

# நான்கு பேரை கைது செய்துவிட்டு கடமையை உதறித்தள்ளிய காவல்துறைBody:வேலூர் கோட்டையில் கடந்த காதலுடன் பொழுதுபோக்கு வந்த இளம்பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 18.01.2020 அன்று வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் பணிபுரியும் காதல் ஜோடிகளான இளம்பெண் (24) மற்றும் இளைஞர்(20) பணியை முடித்து விட்டு, சாரதி மாளிகை எதிரே உள்ள கோட்டை பூங்காவிற்கு இரவு 9.30 மணிக்கு சென்றுள்ளனர்.அப்போது இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, போதையில் சுற்றித்திரிந்த 3 பேர் கொண்டக் கும்பல் இளம்பெண்ணை மிரட்டி செல்போன், அணிந்திருந்த தங்க கம்மலை மற்றும் பர்ஸை பறித்துள்ளனர். பின்னர், காதலனை தாக்கி கத்தி முனையில் அந்த கும்பல், பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை(கொடூரமான முறையில் )செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம்பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரும் காவல்நிலையம் சென்று விசாரித்தார். விசாரணையில் வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்த்து. போலீசார் அஜித்தை குண்டு கட்டாக தூக்கி வந்து காவல் துறையினர் தங்களது பாணியில் விசாரணையை தொடங்கினர். ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்பு கொள்ளாத அஜித் ஒரு கட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈட்டுபட்டதை ஒப்புகொண்டான்.மேலும்,போலீசாரின் தீவிர விசாரணையில் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அடா மணிகண்டன் (41), கோழி சக்திவேல் (19) சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க முயன்ற போது சக்திவேல் ரயில் தண்டவாளங்களை கடந்து ஓடி பதுங்கி கொண்டான்,நீண்ட நேர முயற்சிக்கு பிறகு காவல் துறையினர் அவனைக் கைது செய்தனர்.பின்னர்,அடாமணியை பிடிக்க முயன்ற போது சந்து சந்தாக ஓடினான்.அவனை காப்பாற்றும் நோக்கத்தோடு வசந்தபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காவல்துறையினரை குழப்பும் எண்ணத்தில் தவறான தகவல் கொடுத்தனர்.

ஒருகட்டத்தில் போலீசார் அடாமணியின் குடும்பத்தை காவல்நிலையம் அழைத்து வந்து உட்காரவைத்த பிறகு அடாமணி தாமாக காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்..
இவர்கள் மூன்று பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில் ,இளம்பெண்ணிடம் பறித்த செல்போன்,தங்க கம்மல் மணிபர்சை ஆட்டோ ஓட்டுனரான கொய்யா மாரியிடம் (32)-கொடுத்ததாக கூறினர்.கொய்யா மாரியையும் கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த பறிமுதல் செய்தனர்.இதில்,குற்றவாளிகள் நான்கு பேரும் பல வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததுள்ளது.இதையடுத்து வேலூர் வடக்கு போலீசார் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் குற்றவாளியான அஜித் தவிர மற்ற மூன்று குற்றவாளிகளும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் ,அஜித்தை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

வேலூர் கோட்டை இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கியமான அடையாளமாகும் முதல் சுதந்திர போராட்டம் இந்த கோட்டையில் தான் தொடங்கியது அதாவது இங்கிருந்த இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்து முதல் முதலாக போர் தொடுத்தனர் சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டை தற்போது வேலூர் மாநகரின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வருகிறது கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையின் மதில் சுவரை பார்ப்பதற்காகவும் கோட்டையில் உள்ள பூங்காவில் பொழுது போக்குவதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர் அதேசமயம் காதலர்கள் என்ற போர்வையில் வேலூர் கோட்டையில் இளம் ஜோடிகள் அமர்ந்துகொண்டு ஆபாசம் முறையில் நடந்து கொள்ளும் சம்பவம் இங்கு வரும் பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைக்கிறது கோட்டையின் மதில் சுவர்கள் கோட்டையின் பூங்காக்களில் அமர்ந்து மணிக்கணக்கில் காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டும் பொழுதை போக்குகின்றனர் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற இதுஒரு முன்னுதாரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர் எனவே கோட்டையில் நடைபெறும் காதல் லீலைகளை கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த விவகாரத்தில் போலீசார் தற்போது நடந்த சம்பவத்தை மட்டும் முன்வைத்து குற்றவாளிகளை கைது செய்ததுடன் தங்களது கடமை முடிந்துவிட்டது போல் நடந்துகொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வரும்காலங்களில் கோட்டையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடுவதுடன் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.