ETV Bharat / state

குடியாத்தம் பகுதியில் தினமும் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்.. எஸ்.பி-யின் அதிரடி நடவடிக்கை..

Vellore SP order to prevent accidents: குடியாத்தம் நகரப் பகுதியில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 3:00 PM IST

Vellore SP order to prevent accidents
குடியாத்தம் பகுதியில் தினமும் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்
குடியாத்தம் பகுதியில் தினமும் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்

வேலூர்: குடியாத்தம் நகரப் பகுதியானது தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியாக இருப்பதால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகப்படியான கனரக வாகனங்கள் பொருட்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதேசமயம் தினந்தோறும் காலை வேளையில் பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அதிகப்படியாக இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் இப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படுவதாகவும், எனவே இதற்கு விரைவாக உரிய தீர்வு எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர், இந்த பகுதியின் வழியாக ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களையும் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.

மேலும், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் வாகனங்கள் செல்லக்கூடாது என்றும், இந்த உத்தரவைப் பின்பற்றி கனரக வாகன ஓட்டிகள் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு உதவி செய்யும் படியும் அறிவுரை கூறினார்.

இந்த காரணத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் குடியாத்தம் நகரப் பகுதியில் போக்குவரத்து குறைந்த பின்பு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்களை ஒவ்வொன்றாகப் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

குடியாத்தம் பகுதியில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உடனடி நடவடிக்கை செயலை குடியாத்தம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உதயநிதி சனாதன விவகாரம்.. நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறிவோம்... சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சரின் வீடியோ!

குடியாத்தம் பகுதியில் தினமும் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்

வேலூர்: குடியாத்தம் நகரப் பகுதியானது தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியாக இருப்பதால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகப்படியான கனரக வாகனங்கள் பொருட்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதேசமயம் தினந்தோறும் காலை வேளையில் பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அதிகப்படியாக இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் இப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படுவதாகவும், எனவே இதற்கு விரைவாக உரிய தீர்வு எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர், இந்த பகுதியின் வழியாக ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களையும் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.

மேலும், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் வாகனங்கள் செல்லக்கூடாது என்றும், இந்த உத்தரவைப் பின்பற்றி கனரக வாகன ஓட்டிகள் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு உதவி செய்யும் படியும் அறிவுரை கூறினார்.

இந்த காரணத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் குடியாத்தம் நகரப் பகுதியில் போக்குவரத்து குறைந்த பின்பு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்களை ஒவ்வொன்றாகப் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

குடியாத்தம் பகுதியில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உடனடி நடவடிக்கை செயலை குடியாத்தம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உதயநிதி சனாதன விவகாரம்.. நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறிவோம்... சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சரின் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.