ETV Bharat / state

தறிகெட்டுச் சென்று இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திய லாரி!

வேலூர்: சார்னாம்பேடு பகுதியில் தறிகெட்டு ஓடிய லாரி (சுமையுந்து), இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 21, 2019, 9:15 PM IST

விபத்துக்குள்ளான லாரி

வேலூர் சார்னாம்பேடு பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இப்பள்ளி அருகே சுமையுந்து ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது. அப்போது சுமையுந்தின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் முயன்றபோது, பிரேக் பிடிக்காமல் போகக், கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்ற சுமைதானி(லோடு ஆட்டோ) மீது மோதியுள்ளது.

இதில், சுமைதானி(லோடு ஆட்டோ) தலைகுப்புற கவிழ்ந்தது. பின்னர் இதனைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக சுமையுந்தைச் சாலையின் ஓரமாகத் திருப்ப முயன்றார். அப்போது, இடது புறமாக வந்துகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இதில், அந்த வாகனத்துக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த சுமையுந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் உள்ள சுவர் மீது மோதி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சுமையுந்து மோதிய சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அடிப்பட்ட வாகனத்தில் இருந்தவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்ற பதற்றத்துடன் ஓடிச்சென்று அவர்களை மீட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திக்குள்ளான அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் இதுபோன்று பல முறை விபத்து ஏற்படுகிறது என்றும், இங்குப் போடப்பட்டிருக்கும் சாலை பாதுகாப்பானதாக இல்லை என்பதால், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் சார்னாம்பேடு பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இப்பள்ளி அருகே சுமையுந்து ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது. அப்போது சுமையுந்தின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் முயன்றபோது, பிரேக் பிடிக்காமல் போகக், கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்ற சுமைதானி(லோடு ஆட்டோ) மீது மோதியுள்ளது.

இதில், சுமைதானி(லோடு ஆட்டோ) தலைகுப்புற கவிழ்ந்தது. பின்னர் இதனைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக சுமையுந்தைச் சாலையின் ஓரமாகத் திருப்ப முயன்றார். அப்போது, இடது புறமாக வந்துகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இதில், அந்த வாகனத்துக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த சுமையுந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் உள்ள சுவர் மீது மோதி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சுமையுந்து மோதிய சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அடிப்பட்ட வாகனத்தில் இருந்தவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்ற பதற்றத்துடன் ஓடிச்சென்று அவர்களை மீட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திக்குள்ளான அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் இதுபோன்று பல முறை விபத்து ஏற்படுகிறது என்றும், இங்குப் போடப்பட்டிருக்கும் சாலை பாதுகாப்பானதாக இல்லை என்பதால், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி

ஆட்டோ, கார் மீது மோதி பயங்கர விபத்து - அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை


வேலூர் மாவட்டம் வேலூர் தெற்கு காவல் நிலையம் அடுத்த சார்னாம்பேடு பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது இந்த நிலையில் இன்று இரவு இந்த பள்ளி அருகே சரக்கு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி முன்னாள் சென்ற லோடு ஆட்டோ மீது மோதியுள்ளது இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது இதையடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர் சாமர்த்தியமாக லாரியை சாலையின் ஓரமாக திருப்ப முயன்றார் அப்போது இடது புறம் வந்து கொண்டிருந்த இண்டிகா கார் மீது லாரி மோதியது இதில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி நின்றது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி ஏற்படுத்திய விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது லாரி மோதிய சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ஆட்டோ மற்றும் காரில் இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்ற பதற்றத்துடன் ஓடிச்சென்று அவர்களை மீடடனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் இருந்த நபர்களுக்கோ ஆட்டோவில் இருந்த டிரைவருக்கோ பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை காரில் ஜெயக்குமார் லதா ரமேஷ் மற்றொரு ரமேஷ் ஆகிய 4 பேரும் இருந்தனர். இவர்கள்  மிகவும் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார் இருப்பினும் திடீரென லாரி மோதியதால் தாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்த்தாக அவர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து விபத்துக்குள்ளான காரை ஓட்டிய டிரைவர் ஜெயக்குமார் கூறுகையில், "நான் எனது உறவினர்களை ஏற்றிக்கொண்டு சார்னாம்பேடு வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கண் இமைக்கும் நேரத்தில் லாரி ஒன்று வேகத்துடன் காருக்கு பின்பகுதியில் மோதியது இதைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் அடுத்த சில நிமிடம் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை பின்னர் அந்த லாரி எங்களை இடித்துவிட்டு நேராக சென்றது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் இருந்த எங்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை காரை சுற்றிலும் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது மத்தபடி உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில, இந்த பகுதியில் இது போன்று பல முறை விபத்து ஏற்படுகிறது இங்கே சாலை பாதுகாப்பானதாக இல்லை எனவே விபத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.