ETV Bharat / state

லியோ FDFS 9 மணிக்கு மட்டுமே தொடங்க வேண்டும்… வேலூர் கலெக்டர் கண்டிஷன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 6:58 PM IST

லியோ படத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் எனவும், முதல் காட்சி 9 மணிக்கு தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் வேலூர் மாவட்ட திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் கண்டிஷன்
வேலூர் கலெக்டர் கண்டிஷன்

வேலூர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் லோகேஷ் கூட்டணியில் இரண்டாவது திரைப்படம் என்பதால் லியோ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக லியோ படத்திற்கு சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு திரையிட்டு கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு லியோ படத்தை ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் லியோ படம் திரையிடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும், முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.

திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல், மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்குதக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும், விதிமீறல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணா ம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் வேடமணிந்து நூதன திருட்டு.. வேலூரில் பெண் உட்பட 8 பேர் கைது.. நடந்தது என்ன?

வேலூர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் லோகேஷ் கூட்டணியில் இரண்டாவது திரைப்படம் என்பதால் லியோ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக லியோ படத்திற்கு சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு திரையிட்டு கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு லியோ படத்தை ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் லியோ படம் திரையிடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும், முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.

திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல், மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்குதக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும், விதிமீறல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணா ம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் வேடமணிந்து நூதன திருட்டு.. வேலூரில் பெண் உட்பட 8 பேர் கைது.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.