ETV Bharat / state

லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம் செல்போன் கொள்ளை: மூன்று பேர் கைது

author img

By

Published : Dec 5, 2019, 7:29 AM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம் மற்றும் செல்போன் திருடிய வழிப்பறி கொள்ளையர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

robbery nattrathampalli
robbery nattrathampalli

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்கச்சாவடி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு மார்பல்ஸ் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை நெல்லையைச் சேர்ந்த சுகுமார் ஒட்டிவந்தார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரியை சாலையின் ஓரம் நிறுத்தினார்.

அப்போது அங்கு வந்த ஆறுபோ் கொண்ட கும்பல் சுகுமாரை சரமாரியாகத் தாக்கிவிட்டு ரூ.5000, செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவர் தனது செல்போனை அங்கு தவறவிட்டு சென்றார். அதை எடுத்து கொண்டு சுகுமார் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து அந்த செல்போனையும் ஒப்படைத்தார்.

மூன்று பேர் கைது

அதை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த செல்போன் புது பூங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடையது என்று தெரியவந்து. இதனையடுத்து விஜயகுமாரை பிடித்து விசாரித்த காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன், மிட்டூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஒடி தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்கச்சாவடி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு மார்பல்ஸ் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை நெல்லையைச் சேர்ந்த சுகுமார் ஒட்டிவந்தார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரியை சாலையின் ஓரம் நிறுத்தினார்.

அப்போது அங்கு வந்த ஆறுபோ் கொண்ட கும்பல் சுகுமாரை சரமாரியாகத் தாக்கிவிட்டு ரூ.5000, செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவர் தனது செல்போனை அங்கு தவறவிட்டு சென்றார். அதை எடுத்து கொண்டு சுகுமார் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து அந்த செல்போனையும் ஒப்படைத்தார்.

மூன்று பேர் கைது

அதை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த செல்போன் புது பூங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடையது என்று தெரியவந்து. இதனையடுத்து விஜயகுமாரை பிடித்து விசாரித்த காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன், மிட்டூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஒடி தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:நாட்றம்பள்ளி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போன் திருடிய வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது..Body:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்க சாவடி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு மார்பல்ஸ் ஏற்றி வந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுகுமார் 29 வயது லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க செல்லும்பொழுது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் சுகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு ரூபாய் 5000 மற்றும் செல்போன் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை திருடிசென்று தப்பிக்கும்போது கொள்ளையன் ஒருவரின் செல்போன் தவறவிட்டு சென்றுள்ளனர்...

அதனை கொண்டு லாரி ஓட்டுனர் சுகுமார் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து செல்போனை ஒப்படைத்தார் அதன்படி காவல்துறையினர். செல்போனை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் அந்த செல்போன் புது பூங்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (20) என்பருடையது என்று தெரியவந்தது,


விஜயகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன் (19) மிட்டூர் பகுதியை சேர்ந்த சரவணன் (19) ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்தது இவர்கள் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


மேலும் தப்பி ஓடி தலை மறைவாக இருக்கும் மூன்று பேரை நாட்றம்பள்ளி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்...


மேலும் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறி வருகின்றது இதை தடுக்க இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.