ETV Bharat / state

அலைபேசி மூலமாக மருத்துவரிடம் விவரம்கேட்டு பிரசவம் - கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - Woman dies due to negligence of Tirupathur doctors

திருப்பத்தூர்: அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் அலைபேசி மூலமாக மருத்துவரிடம் விவரம்கேட்டு பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்
கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்
author img

By

Published : Jan 27, 2020, 11:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி இமான்(28). இவருடைய மனைவி பரிதா கடந்த 21ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் அலைபேசியில் மருத்துவர்களிடம் விவரம்கேட்டு பரிதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் உயிரிழந்த பரிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்

பின்னர் செய்தியாளரிடம் அஸ்லாம் பாஷா பேசுகையில், "பரிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்களின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மீன் பிடிக்கச் சென்ற மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி இமான்(28). இவருடைய மனைவி பரிதா கடந்த 21ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் அலைபேசியில் மருத்துவர்களிடம் விவரம்கேட்டு பரிதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் உயிரிழந்த பரிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்

பின்னர் செய்தியாளரிடம் அஸ்லாம் பாஷா பேசுகையில், "பரிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்களின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மீன் பிடிக்கச் சென்ற மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Intro:Body:திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த பரிதா வின் குடும்பத்தினரை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல்- பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்

திருப்பத்தூர் தாலுக்கா ஆரிப் நகரைச் சேர்ந்த இமான்(28) கூலி தொழிலாளி இவருடைய மனைவி பரிதா கடந்த 21ஆம் தேதி பிரசவத்திற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பரிதா பிரசவ வலியில் துடிக்கும் பொழுது மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அவர் உயிரிழந்தார். அதன்பிறகு விசாரணையில் செவிலியர்களை செல்போன் மூலமாக டாக்டரிடம் கேட்டு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் உயிரிழந்த பரிதா வின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்பு செய்தியாளரிடம் பேசிய அஸ்லாம் பாஷா மருத்துவர்களின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்தார் பின்பு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர் . இவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்களை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் இச்சம்பவம் குறித்து தீர்வு கிடைக்காவிடில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.