ETV Bharat / state

பல நாள் திருடன் ஒரு நாள்... - போலீஸிடம் தாமாக சிக்கியத் திருடன்! - காவல்துறையினரிடம் தாமாக சிக்கிய திருடன்

வேலூர்: திருப்பத்தூர் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்ட நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விசாரித்ததில், அவர் நகை திருடன் என்பது தெரியவந்துள்ளது.

vellore
author img

By

Published : Oct 7, 2019, 7:58 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அவர் வைத்திருந்த கைப்பையில், கட்டிங் பிளேயர், கள்ளச் சாவி, இரும்பு ராடு உள்ளிட்டவை இருந்துள்ளது.

காவல் துறை விசாரணை

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதியூர் பகுதியில், தங்கவேல் என்பவரது வீட்டில், பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகளை இவர் திருடியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேறு எங்காவது அவர், திருட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அவர் வைத்திருந்த கைப்பையில், கட்டிங் பிளேயர், கள்ளச் சாவி, இரும்பு ராடு உள்ளிட்டவை இருந்துள்ளது.

காவல் துறை விசாரணை

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதியூர் பகுதியில், தங்கவேல் என்பவரது வீட்டில், பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகளை இவர் திருடியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேறு எங்காவது அவர், திருட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது

Intro:திருப்பத்தூர் பகுதியில் கொள்ளை போன 2 மாதத்தில் 12 சவரன் தங்க நகை கண்டுபிடிப்பு கிராம போலீசார் அதிரடி நடவடிக்கைBody:



வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதன லோகன் ரோந்து பணியில் போது அங்கு சந்தேகத்துக்குரிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவனிடமிருந்த பையை சோதனை செய்ததில்

.இஸ்குருடைவர் கட்டிங் பிளேயர். கள்ள சாவி இரும்பு ராடு .உள்ளிட்டவை இருந்தது அவரை பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில்

இவர், வாணியம்பாடி தாலுக்கா வடக்கு பட்டு பகுதியை சேர்ந்த செல்வம் அவரது மகன் ரகுராமன்30 என்பதும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதியூர்பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை திருடியது தெரியவந்தது

மேலும் இவரிடமிருந்த 12 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு நகையின் உரிமையாளரிடம் நகைக்கான சரியான ஆவணத்தை பெற்று கொண்டு நகையை நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைகுறித்து
செய்தியாளர்களிடம் சந்திப்பில் கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் மதன லோகன் கூறுகையில்
திருப்பத்தூர் சுற்றுவட்ட பகுதியில்
மர்ம நபர்கள் ஆட்கள் அவ்வப்போது இல்லாத வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர்,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஒரு தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தோம்

இந்நிலையில் ரோந்து பணியின் போது.திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில்

ஆதியூர் பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நகையை திருடிச் சென்றது ஒப்புக் கொண்டதும் அவனிடம் இருந்த 12 சவரன் நகையை பறிமுதல் செய்து நகையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து சரியான ஆவணம் பெற்றுக்கொண்டு நகையை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு கூறினார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.