வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவரது மகன் புகழேந்தி (20). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரில் இறுதியாண்டு தேர்வு எழுதி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் தனது தாய் தந்தை இருவரையும் வெளியூருக்கு பஸ் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிய புகழேந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூக்குப்போட்டு இறந்த மாணவன் எதற்காக இறந்தார் என்ன காரணம் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.