ETV Bharat / state

இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம் - வாணியம்பாடியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடமில்லை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தோள் மீது சுமந்து செல்லவேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்
இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்
author img

By

Published : Dec 11, 2019, 8:18 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது நெக்கனாமலை என்னும் கிராமம் அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து வெள்ளக்குட்டை - கொத்தக்கோட்டை கூட்டுச்சாலையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மலை மீது ஏறிச்செல்ல வேண்டும். ஆனால் வாணியம்பாடியில் இருந்து கூட்டுச்சாலை வரையில் மட்டுமே தார் சாலை அமைந்துள்ளது.

அங்கிருந்து நெக்கனாமலை பகுதிக்கு செல்ல சுமார் எட்டு கிலோமீட்டர் கரடுமுரடான மண் சாலையும், ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் மலையேற்றம் இருக்கிறது. நெக்கனாமலை மலை கிராமத்தில் சுமார் 167 குடும்பங்களும் 587 மக்களும் வசித்துவருகின்றனர்.

இதனிடையே இப்பகுதியைச் சேர்ந்த ரஜினி (27) என்ற இளைஞர் கோவையில் வேலை பார்த்துவந்தார். அங்கு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். பின்னர் ரஜினியின் உடல் அவரது ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் சடங்குகள் செய்து தூளி கட்டி நடு இரவில் மலைப்பாதையில் உடலை சுமந்து சென்றனர்.

இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

இது குறித்து முன்னாள் ஏம்.எல்.ஏ.கோவிசம்பத்குமார் கூறும்போது, "அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது சாலைவசதி ஏற்படுத்தி தருகிறோம் எனக் கூறுகின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின் இந்தப் பகுதிக்கே வருவதில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை - இறுதி ஊர்வலம் சென்ற உடல்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது நெக்கனாமலை என்னும் கிராமம் அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து வெள்ளக்குட்டை - கொத்தக்கோட்டை கூட்டுச்சாலையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மலை மீது ஏறிச்செல்ல வேண்டும். ஆனால் வாணியம்பாடியில் இருந்து கூட்டுச்சாலை வரையில் மட்டுமே தார் சாலை அமைந்துள்ளது.

அங்கிருந்து நெக்கனாமலை பகுதிக்கு செல்ல சுமார் எட்டு கிலோமீட்டர் கரடுமுரடான மண் சாலையும், ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் மலையேற்றம் இருக்கிறது. நெக்கனாமலை மலை கிராமத்தில் சுமார் 167 குடும்பங்களும் 587 மக்களும் வசித்துவருகின்றனர்.

இதனிடையே இப்பகுதியைச் சேர்ந்த ரஜினி (27) என்ற இளைஞர் கோவையில் வேலை பார்த்துவந்தார். அங்கு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். பின்னர் ரஜினியின் உடல் அவரது ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் சடங்குகள் செய்து தூளி கட்டி நடு இரவில் மலைப்பாதையில் உடலை சுமந்து சென்றனர்.

இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

இது குறித்து முன்னாள் ஏம்.எல்.ஏ.கோவிசம்பத்குமார் கூறும்போது, "அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது சாலைவசதி ஏற்படுத்தி தருகிறோம் எனக் கூறுகின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின் இந்தப் பகுதிக்கே வருவதில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை - இறுதி ஊர்வலம் சென்ற உடல்?

Intro:

சாலை வசதி இல்லாததால் வெளியூரில் இறந்தவரின் உடலை டோலி கட்டி தோள் மீது சுமந்து நடு இரவில் மலை மீது கொண்டுச்சென்ற மலைக்கிராம மக்கள்...

பல ஆண்டுகளாக தார் சாலைக்காக தவம் இருக்கும் அவல நிலை......


Body: திருப்பத்தூர் மாவட்டம்


வாணியம்பாடி அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது அமைந்துள்ளது நெக்கனாமலை என்னும் கிராமம்....

வாணியம்பாடியிலிருந்து வெள்ளக்குட்டை - கொத்தக்கோட்டை கூட்டுச்சாலையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலை மீது ஏறிச்செல்ல வேண்டும் ஆனால் வாணியம்பாடியில் இருந்து கூட்டுச்சாலை வரையில் மட்டுமே தார் சாலை அமைந்துள்ளது.... அங்கிருந்து நெக்கனாமலை பகுதிக்கு செல்ல சுமார் 8 கிலோமீட்டர் கரடுமுரடான மண் சாலையும் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் மலையேற்றம் இருக்கிறது...

இந்நெக்கனாமலை மலை கிராமத்தில் சுமார் 167 குடும்பங்களும் 587 மக்களும் வசித்து வருகின்றனர்....

இந்நிலையில் இம்மலை வாழ்மக்கள் மலைப்பகுதியில் உள்ள தங்களின் நிலங்களில் விளையும் தானியங்களை தலையில் சுமந்தே கரடுமுரடான மலைப்பதையில் வெள்ளக்குட்டை கூட்டுச்சாலைக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் வாணியம்பாடி சந்தைக்கு கொண்டுவருகின்றனர்...

மேலும் இம்மக்களுக்கு மருத்துவ தேவை வாரம் ஒருமுறை ஓரே ஒரு செவிலியர் மட்டுமே மலை மீது வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.....

மேலும் அவசர மருத்துவ உதவி இல்லாமல் பல கர்ப்பிணி பெண்கள் டோலி கட்டி மலை மீது இருந்து நடு இரவிலும் காலம் நேரம் பார்க்காமல் ஊர் மக்கள் வாணியம்பாடி பகுதிக்கு கொண்டு வருகின்றனர்...

இந்நிகழ்வால் பல முறை உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்....

மேலும் தங்கள் பிள்ளைகள் கல்வி அறிவு பெற சுமார் 6 கிலோ மீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தினமும் நடந்தே வருகின்றனர்....

இதனால் குழந்தைகள் பள்ளி முடித்து விட்டு வீடு திரும்ப இரவு நெடுநேரம் ஆவதால் மலைப்பகுதியில் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்....

இதனால் தங்களின் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு குறைந்த பட்ச ஊதியத்திற்கு வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர்....

இதன்படி இம்மலை கிராமத்திலிருந்து ரஜினி (27) என்ற வாலிபர் கோவை பகுதியில் கட்டுமான பணிக்கு தனது கர்ப்பினி மனைவியையும் அவரது 2 பிள்ளையும் விட்டு வேலைக்கு சென்றுள்ளார்...


இந்நிலையில் அங்கு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் ரஜினி... இந்நிலையில் இதுகுறித்து ரஜினியின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் அங்கு சென்று உடலை வாங்க ஓர் நாட்கள் ஆகியுள்ளது...

அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணியளவில் ரஜினியின் உடல் அவரது ஊருக்கு கொண்டுச்செல்ல ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது..

அங்கு தாயார் நிலையில் இருந்த ரஜினியின் உறவினர்கள் ரஜினியின் உடலை பெறுவதற்கு சடங்குகள் செய்து தூளி கட்டி நடு இரவில் மலைப்பாதையில் கொண்டுச்சென்றனர்...

இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் அரசாங்கமும் அதிகாரிகளும் ஓட்டு போட மட்டும் தங்கள் கிராமத்தை தேடி வருவதாகவும் அதற்கு பிறகு இப்படி ஓர் இடம் இருப்பதே மறந்து விடுவதாவுகம் தெரிவிக்கின்றனர்..

இத்தொகுதியை சேர்ந்த முன்னாள் ஏம்.எல்.ஏ.கோவிசம்பத்குமார் ஓட்டு கேட்டு வரும் போது இப்பகுதி மக்கள் தூளி கட்டி மலை மீது கொண்டுச்சென்றோம் அங்கு வந்து ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக இம்மலைப்பகுதிக்கு சாலை வசதி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து சென்றார் .. ஆட்சிக்கு வந்ததும் இதுவரையில் ஓர் முறை கூட இம்மலைப்பகுதிக்கு வரவில்லையென்று தெரிவிக்கின்றனர்....


Conclusion: மேலும் அதிகாரிகள் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டுகின்றனர்..

ஆனால் எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அந்த அதிகாரிகளே தங்களுக்கு கடவுள் போல என்று தெரிவிக்கின்றனர்....

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.