திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ’சுஜித்’ என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மனதில் ஒரு நீங்கா துயரமாக எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் ’சுஜித்’ என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில், உயிரிழந்த சுஜித்திற்கு பதிலாக தவறுதலாக வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த முனிவேல் - சுகன்யா தம்பதியினரின் இரண்டு வயது மகன் ’நித்திஷ்’ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இதில் நித்திஷ் நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ’சுஜித்’ என்று வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உயிருடன் உள்ள தனது மகன் நித்திஷ் புகைப்படங்கள் இறந்துவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று நித்திஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து தன்னுடைய மகன் புகைப்படங்கள் நீக்கப்பட வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சுஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குக!’ - திருமா கோரிக்கை