ETV Bharat / state

வேலூரில் மடிக்கணினியால் நடந்த சோகம்: சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Nov 4, 2019, 5:31 PM IST

வேலூர்: வஞ்சூரில் மடிக்கணினி கொடுக்க மறுத்ததால் மனமுடைந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide in vellore

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மளிகை கடை முருகேசன்(36). இவருக்கு வனிதா (16) பிரித்திகா (14), அபிநயா (10) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். முருகேசனின் மூத்த மகள் வனிதா 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனால் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டத்தின் கீழ் பள்ளியில் அவருக்கு மடிக்கனிணி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வனிதாவும், பிரித்திகாவும் வீட்டில் அதிக நேரம் மடிக்கணினியை சந்தோஷமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பிரித்திகா நேற்று வனிதாவிடம் மடிக்கணினி கேட்டுள்ள நிலையில், வனிதா மடிக்கணினியை கொடுக்க மறுத்ததுள்ளார். இதனால் மனமுடைந்த பிரித்திகா வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்ட முருகேசன் கவலைக்கிடமான நிலையில் பிரித்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறிமி செய்துகொண்டதால் சோகத்தில் உள்ள உறவினர்கள்

இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மடிக்கணினிக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்கள் மேலோங்கினால் அதிலிருந்து மீள்வதற்குத் சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். அதைத்தவிர தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

இதையும் படிங்க: முள்புதரில் கிடந்த அரசின் இலவச மடிக்கணினிகள்...! - கயவர்களை தேடும் காவல் துறை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மளிகை கடை முருகேசன்(36). இவருக்கு வனிதா (16) பிரித்திகா (14), அபிநயா (10) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். முருகேசனின் மூத்த மகள் வனிதா 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனால் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டத்தின் கீழ் பள்ளியில் அவருக்கு மடிக்கனிணி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வனிதாவும், பிரித்திகாவும் வீட்டில் அதிக நேரம் மடிக்கணினியை சந்தோஷமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பிரித்திகா நேற்று வனிதாவிடம் மடிக்கணினி கேட்டுள்ள நிலையில், வனிதா மடிக்கணினியை கொடுக்க மறுத்ததுள்ளார். இதனால் மனமுடைந்த பிரித்திகா வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்ட முருகேசன் கவலைக்கிடமான நிலையில் பிரித்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறிமி செய்துகொண்டதால் சோகத்தில் உள்ள உறவினர்கள்

இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மடிக்கணினிக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்கள் மேலோங்கினால் அதிலிருந்து மீள்வதற்குத் சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். அதைத்தவிர தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

இதையும் படிங்க: முள்புதரில் கிடந்த அரசின் இலவச மடிக்கணினிகள்...! - கயவர்களை தேடும் காவல் துறை

Intro:வேலூர் மாவட்டம

வஞ்சூரில் சோகம் ; அக்கா மடிக்கனிணி கொடுக்காத கோபத்தில் தங்கை தூக்கிட்டு தற்கொலைBody:வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(36). மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முருகேசனின் மூத்த மகள் 12ம் வகுப்பு படித்து வருவதால் அவருக்கு பள்ளியில் மடிக்கனிணி கொடுத்துள்ளனர். இதையடுத்து வீட்டில் அக்காள் தங்கைகள் மடிக்கனிணி மீது மோகத்துடன் இருந்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மகள் பிரித்திகா(10) நேற்று தனது அக்காவிடம் மடிக்கனிணி கேட்டுள்ளார் ஆனால் அவர் கொடுக்காத்தால் மனமுடைந்த பிரித்திகா வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் கவலைக்கிடமான நிலையில் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் (CMC) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரித்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. உயிரிரந்த பிரித்திகா 10ம் வகுப்ஙு படித.து வந்தார். மடிக்கனிணி பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோகத்தில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.