ETV Bharat / state

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி தேர்வு - 'பேண்ட் சர்ட்' சகிதம் மாட்டைப் பிடித்த தேர்வர்கள்! - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூரில் நடந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணித் தேர்வுக்கு வந்த மாணவர்கள் மாடுகளைப் பிடித்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு
author img

By

Published : Apr 8, 2022, 10:40 PM IST

வேலூர்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்தல் ஏப்.06ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை, மாவட்டம்தோறும் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனைகளில் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 22 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த பணிக்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கரோனா உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நேர்காணல் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தொடங்கியது. 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததால் தினமும் 800 பேருக்கு நேர்காணல் நடத்தும் வகையில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.

கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை உள்ளிட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, பெண்கள் சிலர் மாடுகளை கையாளும் போது சற்றே பயத்துடன் கையாண்டனர். மேலும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்ற கல்வித்தகுதிக்கு 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணிக்காக வருவோர் ஒருபுறம் இருந்தாலும் உயர் கல்வி படித்தும் வேலையின்மை காரணமாக இம்மாதிரியான தேர்வுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து முயற்சி வருவதாக நேர்காணலில் பங்கேற்றோர் கூறினர்.

மேலும் நேர்காணலில் மாடு பிடித்தல், மாட்டை கையாளுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற தேர்வு வைக்க காரணம் என்ன என்பது குறித்து மண்டல இணை இயக்குநர் மருத்துவர் நவநீதகிருஸ்ணன் கூறுகையில், 'இது கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவுவதற்கான கால்நடை பராமரிப்பு பணிக்கான நேர்காணல் ஆகும்.

இது கால்நடை தொடர்பான பணி என்பதால், மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை எப்படி கையாள்வது என்ற அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை கையாள முடியும். இதற்கு 20 மதிப்பெண்கள் ஒதுக்கியிருக்கோம்.

அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கிறதா என்றும் சோதிக்கிறோம். அலுவலக பணிகளை மேற்கொள்ள அது தேவை. இதற்கு 20 மதிப்பெண்கள் மற்றும் ஆட்சியர் யார்? இவரது அலுவலகம் எங்குள்ளது? உள்ளூர் பேருந்து பயண விவரம் போன்ற அடிப்படை கேள்விகளை கேட்டு வருகிறோம்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு

இதற்கு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்கள் வைத்துள்ளோம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதெல்லாம் இருந்தால் தான் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு பணியாற்றத் தகுதி பெறுவார்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு எதற்கு? - ஆசிரியர்கள் போராட்டம்

வேலூர்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்தல் ஏப்.06ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை, மாவட்டம்தோறும் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனைகளில் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 22 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த பணிக்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கரோனா உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நேர்காணல் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தொடங்கியது. 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததால் தினமும் 800 பேருக்கு நேர்காணல் நடத்தும் வகையில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.

கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை உள்ளிட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, பெண்கள் சிலர் மாடுகளை கையாளும் போது சற்றே பயத்துடன் கையாண்டனர். மேலும், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்ற கல்வித்தகுதிக்கு 22 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணிக்காக வருவோர் ஒருபுறம் இருந்தாலும் உயர் கல்வி படித்தும் வேலையின்மை காரணமாக இம்மாதிரியான தேர்வுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து முயற்சி வருவதாக நேர்காணலில் பங்கேற்றோர் கூறினர்.

மேலும் நேர்காணலில் மாடு பிடித்தல், மாட்டை கையாளுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற தேர்வு வைக்க காரணம் என்ன என்பது குறித்து மண்டல இணை இயக்குநர் மருத்துவர் நவநீதகிருஸ்ணன் கூறுகையில், 'இது கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவுவதற்கான கால்நடை பராமரிப்பு பணிக்கான நேர்காணல் ஆகும்.

இது கால்நடை தொடர்பான பணி என்பதால், மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை எப்படி கையாள்வது என்ற அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளை கையாள முடியும். இதற்கு 20 மதிப்பெண்கள் ஒதுக்கியிருக்கோம்.

அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கிறதா என்றும் சோதிக்கிறோம். அலுவலக பணிகளை மேற்கொள்ள அது தேவை. இதற்கு 20 மதிப்பெண்கள் மற்றும் ஆட்சியர் யார்? இவரது அலுவலகம் எங்குள்ளது? உள்ளூர் பேருந்து பயண விவரம் போன்ற அடிப்படை கேள்விகளை கேட்டு வருகிறோம்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு

இதற்கு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்கள் வைத்துள்ளோம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதெல்லாம் இருந்தால் தான் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு பணியாற்றத் தகுதி பெறுவார்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு எதற்கு? - ஆசிரியர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.