ETV Bharat / state

வேலூரில் சிறைக் கைதி உயிரிழப்பு!

author img

By

Published : Jan 8, 2022, 4:42 PM IST

கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்த காசநோய், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உடல் நலக்குறைவால் சிறைக் கைதி உயிரிழப்பு!
உடல் நலக்குறைவால் சிறைக் கைதி உயிரிழப்பு!

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (53). இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று 2017ஆம் ஆண்டுமுதல் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.

காசநோய் (Tuberculosis), ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 4ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 8) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறைத் துறையினர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (53). இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று 2017ஆம் ஆண்டுமுதல் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.

காசநோய் (Tuberculosis), ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 4ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 8) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறைத் துறையினர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.