ETV Bharat / state

செல்போன் பறிப்பில் ஈடுபட்டரை மடக்கிப் பிடித்த காவலர்கள்

author img

By

Published : Jan 22, 2020, 9:21 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிச் சென்று காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.

ஆம்பூரில் செல்போன் திருடனை விரட்டி பிடித்த காவலர்கள் ஆம்பூரில் செல்ஃபோன் பறிப்பு திருப்பத்தூர் செல்ஃபோன் திருட்டு Police chasing cellphone thief in Ambur Cellphone Theft In amubur Cellphone Theft In thirupattur
Police chasing cellphone thief in Ambur

வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் செல்போனில் உறவினரிடம் பேசிவிட்டுத் தருவதாகக் கூறி செல்போனை தினேஷிடம் வாங்கியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் திடீரென்று அங்கிருந்து செல்போனுடன் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் ஆம்பூர் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கண்காணித்துவந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் தினேஷிடம் அவரது செல்போன் எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறித்தினர். அதன்பேரில், தினேஷ் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த நபரிடம் பேசி ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த நபர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் செல்போனை கொடுக்க முற்படும்போது, அங்கு மறைந்திருந்த காவலர் சுரேந்திர குமார் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் செல்போனை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இருப்பினும் காவலர் சுரேந்திர குமார் அவனை பின்தொடர்ந்தது விரட்டிச் சென்றுள்ளார்.

செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவர்

இதனிடையே, காவலர் சுரேந்திர குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சிசிடிவி மூலம் அந்த நபர் ஓடுவதை கண்காணிக்குமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அறிவுறித்தலின்படி அந்த நபரை காவலர் ஒரு கி.மீ. தொலைவிற்கு அப்பால் மடக்கிப் பிடித்தனர். அதன்பின், அந்நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பேர்ணம்பட்டு அருகேருள்ள பத்திரபல்லி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் செல்போனில் உறவினரிடம் பேசிவிட்டுத் தருவதாகக் கூறி செல்போனை தினேஷிடம் வாங்கியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் திடீரென்று அங்கிருந்து செல்போனுடன் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் ஆம்பூர் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கண்காணித்துவந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் தினேஷிடம் அவரது செல்போன் எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறித்தினர். அதன்பேரில், தினேஷ் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த நபரிடம் பேசி ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த நபர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் செல்போனை கொடுக்க முற்படும்போது, அங்கு மறைந்திருந்த காவலர் சுரேந்திர குமார் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் செல்போனை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இருப்பினும் காவலர் சுரேந்திர குமார் அவனை பின்தொடர்ந்தது விரட்டிச் சென்றுள்ளார்.

செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவர்

இதனிடையே, காவலர் சுரேந்திர குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சிசிடிவி மூலம் அந்த நபர் ஓடுவதை கண்காணிக்குமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அறிவுறித்தலின்படி அந்த நபரை காவலர் ஒரு கி.மீ. தொலைவிற்கு அப்பால் மடக்கிப் பிடித்தனர். அதன்பின், அந்நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பேர்ணம்பட்டு அருகேருள்ள பத்திரபல்லி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

Intro:Body:ஆம்பூரில் செல்போன் திருடனை விரட்டி விரட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் திருடனுடன் சென்று மடக்கிப் பிடித்த காவலர்கள்...



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் குடியாத்தம் அடுத்த கல்மடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார்... அப்போது அங்கு வந்த பேர்ணம்பட்டு பத்திரபல்லி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் செல்போனில் பேசி விட்டு தருவதாக செல்போனை வாங்கியுள்ளார்.. திடீரென்று அங்கிருந்து செல்போனுடன் தப்பியுள்ளார்...

பின்னர் செல்போனை பறிகொடுத்த தினேஷ் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த்துள்ளார் புகாரின் பேரில் ஆம்பூர் நகர பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் தினேஷின் செல்போன் எண்ணை பயன்படுத்திவந்த தமிழ்ச்செல்வனை பிடிக்க போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் தினேஷ் தமிழ்ச்செல்வனிடம் செல்போனில் பேசி ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார்... அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளார் தமிழ்செல்வன் அதைத்தொடர்ந்து திருடன் தமிழ் செல்வன் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் செல் போனை கொடுக்க முற்படும் போது அங்கு மறைந்திருந்த காவலர் சுரேந்திர குமார் திருடனை பிடிக்க முயன்றபோது செல்போனை வீசிவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து மின்னல் வேகத்தில் காவலரை கண்டு தப்பி திருடன் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வேகமாக சென்றான் அவனை பின்தொடர்ந்தது விரட்டி சென்ற காவல்துறையினர் திருடனை புத்திசாலிதனமாக பிடிக்க ஆம்பூர் நகர்பகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இருந்து ஆய்வாளர் அரிகிருஷ்ணன் அறிவுறுத்த மேலும் காவலர்கள் சென்று பல்வேறு சாலைகள் வழியாக ஓடுவதை கேமரா மூலம் கண்காணித்து இருந்து செல்போன் மூலம் காவலர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து.... இறுதியாக நேதாஜி சாலை அருகே தனியார் லாரி செட் உள்ளே திருடன் நுழைய முற்படும்போது காவலர் சுரேந்திர குமார் மற்றும் ஏழுமலை ஆகியோர் திருடனை மடக்கிப் பிடித்தனர்....

பின்னர் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.