ETV Bharat / state

வேலூர் சிறைக்கு வந்த பேரறிவாளன்!

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு வந்தடைந்தார்.

author img

By

Published : Nov 12, 2019, 10:36 AM IST

Updated : Nov 12, 2019, 11:40 AM IST

வேலூர் சிறைக்கு வந்த பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் உள்ளார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், உடல் நலம் குன்றியுள்ள அவரது தந்தையை பார்ப்பதற்காகவும் சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் தாய் அற்புதம்மாள் பரோல் வழங்கவேண்டி கோரினார்.

பலத்த காவல் பாதுகாப்புடன் பேரறிவாளன் இல்லம்

இதனடிப்படையில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

இங்கு அவரை முறைப்படி சென்னை காவல் துறையினர் ஒப்படைத்தனர். பின்னர், சில ஆவண நடைமுறைக்குப் பிறகு பேரறிவாளன் இங்கிருந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்குச் செல்கிறார்.

திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, ஆய்வாளர் பழனிவேல் தலைமையிலான காவல் துறையினர் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை அழைத்துச் செல்கிறார்கள்.

இதையும் படிங்க : 30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் உள்ளார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், உடல் நலம் குன்றியுள்ள அவரது தந்தையை பார்ப்பதற்காகவும் சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் தாய் அற்புதம்மாள் பரோல் வழங்கவேண்டி கோரினார்.

பலத்த காவல் பாதுகாப்புடன் பேரறிவாளன் இல்லம்

இதனடிப்படையில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

இங்கு அவரை முறைப்படி சென்னை காவல் துறையினர் ஒப்படைத்தனர். பின்னர், சில ஆவண நடைமுறைக்குப் பிறகு பேரறிவாளன் இங்கிருந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்குச் செல்கிறார்.

திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, ஆய்வாளர் பழனிவேல் தலைமையிலான காவல் துறையினர் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை அழைத்துச் செல்கிறார்கள்.

இதையும் படிங்க : 30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!

Intro:Body:

Breaking



பேரறிவாளன் வேலூர் சிறைக்கு வந்தடைந்தார்



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் உள்ளார். தனது தந்தை குயில்தாசன் உடல் நிலையை கவனித்து கொள்வதற்காக பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு அவரை முறைப்படி சென்னை போலீசார் ஒப்படைக்கின்றனர். பின்னர் சில ஆவண நடைமுறைக்கு பிறகு பேரறிவாளன் இங்கிருந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு செல்கிறார். திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை அழைத்து செல்கிறார்கள்.


Conclusion:
Last Updated : Nov 12, 2019, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.