வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், “தமிழ்நாட்டிலுள்ள பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலைவாய்பினை ஏற்படுத்தி தர வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும்.
கரோனா நிவாரண நிதியாக குடும்பங்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து, முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளிக்கும் விதமாக, பேரூராட்சி செயல் அலுவலரிடம் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மருத்துவர் சமுதாய மக்கள் மனு