ETV Bharat / state

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

author img

By

Published : Feb 26, 2020, 10:21 PM IST

வேலூர்: வேலூர் ஊராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 60 பேருக்கு, 8.16 லட்சம் செலவில் தொழிற்பயிற்சி மையத்தை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைக்கும் காட்சி
திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைக்கும் காட்சி

பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக, வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 60 பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்கின்றனர். இதற்காக 8.16 லட்சம் செலவில் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பெண்கள் அனைவரும், வாழ்வில் மேம்படுவோம் என ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த மையத்தில் கணிணி பயிற்சி உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை முடித்த பின்னர், பெண்களுக்கு உரிய மானியத்துடன் சொந்த தொழில் தொடங்க வழிவகை செய்யப்படும்.

இதையும் படிங்க: ’நிலுவைத்தொகை தராவிட்டால் மாணவர் சேர்க்கை கிடையாது’ - தனியார் பள்ளிகள் சங்கம்

பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக, வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 60 பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்கின்றனர். இதற்காக 8.16 லட்சம் செலவில் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பெண்கள் அனைவரும், வாழ்வில் மேம்படுவோம் என ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த மையத்தில் கணிணி பயிற்சி உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை முடித்த பின்னர், பெண்களுக்கு உரிய மானியத்துடன் சொந்த தொழில் தொடங்க வழிவகை செய்யப்படும்.

இதையும் படிங்க: ’நிலுவைத்தொகை தராவிட்டால் மாணவர் சேர்க்கை கிடையாது’ - தனியார் பள்ளிகள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.