ETV Bharat / state

பெண் சிசுவை முட்புதரில் வீசிய கொடூரம்... உயிருடன் மீட்பு!

author img

By

Published : Nov 1, 2019, 11:54 PM IST

வேலூர்: குடியாத்தம் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று முட்புதரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தை முட்புதரில் வீசிய கொடூரம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கு சாலையிலிருந்த முட்புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையைப் பற்றி அவ்வழியே சென்றவர்கள் பரதராமி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முட்புதரில் அழுதுகொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெண் குழந்தை முட்புதரிலிருந்து உயிருடன் மீட்பு

பின்னர் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது. குழந்தை 3.8 கிலோ எடை உள்ளது. குழந்தையின் உதட்டுப் பகுதியில் சிறு பிளவு மட்டுமே இருக்கிறது. மற்றபடி குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது. தற்போது குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

மேலும், பெண் குழந்தையைப் புதரில் வீசியது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கு சாலையிலிருந்த முட்புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையைப் பற்றி அவ்வழியே சென்றவர்கள் பரதராமி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முட்புதரில் அழுதுகொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெண் குழந்தை முட்புதரிலிருந்து உயிருடன் மீட்பு

பின்னர் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது. குழந்தை 3.8 கிலோ எடை உள்ளது. குழந்தையின் உதட்டுப் பகுதியில் சிறு பிளவு மட்டுமே இருக்கிறது. மற்றபடி குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது. தற்போது குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

மேலும், பெண் குழந்தையைப் புதரில் வீசியது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூர் மாவட்டம்

குடியாத்தம் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை மூட்புதரில் உயிருடன் மீட்பு - கல் நெஞ்சம் கொண்ட தாயை தேடிவரும் போலீசார்Body:வேலூர் மாவட்டம் குடியாத்தம், அடுத்த பாக்கம் பகுதியில் நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கு அருகில் சாலையோரம் உள்ள முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரதராமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரதராமி காவல்துறையினர் முட் புதரில் அழுதுகொண்டிருந்த பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்

பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆகிறது என்றும் மருத்துவமனையில் தான் குழந்தை பிறந்துள்ளது என்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குழந்தை 3.8 கிலோ எடை உள்ளதாகவும் குழந்தையின் உதட்டு பகுதியில் சிறு பிளவு மட்டுமே இருப்பதாகவும் மற்றபடி குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பெண் சிசுவை சாலையோரம் புதரில் வீசியது யார் என்பதைப்பற்றி பரதராமி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.