ETV Bharat / state

'தாயாரின் உடல்நிலை' - 30 நாள்கள் பரோல் கேட்டு நளினி கடிதம்

author img

By

Published : May 26, 2021, 4:20 PM IST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 நாள்கள் பரோல் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'தாயாரின் உடல்நிலை' - 30 நாள்கள் பரோல் கேட்டு நளினி கடிதம்
'தாயாரின் உடல்நிலை' - 30 நாள்கள் பரோல் கேட்டு நளினி கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், நளினி 29 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்கது வருகிறார்.

இந்நிலையில் அவர் 30 நாள்கள் பரோல் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உள்துறை செயலாளருக்கும் சிறைத் துறை மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "சென்னையில் உள்ள தனது தாய் பத்மா(81) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும். இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கும் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாள்கள் பரோல் வழங்கவேண்டும்" குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க; ’ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், நளினி 29 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்கது வருகிறார்.

இந்நிலையில் அவர் 30 நாள்கள் பரோல் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உள்துறை செயலாளருக்கும் சிறைத் துறை மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "சென்னையில் உள்ள தனது தாய் பத்மா(81) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும். இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கும் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாள்கள் பரோல் வழங்கவேண்டும்" குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க; ’ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.