ETV Bharat / state

12ஆவது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

author img

By

Published : Jun 12, 2020, 3:19 PM IST

Updated : Jun 12, 2020, 4:38 PM IST

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், தனது மனைவி நளினியுடன் பேச அனுமதிக்கக் கோரி வேலூர் மத்திய சிறையில் 12ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

murugan twelfth day fasting to video call his wife
murugan twelfth day fasting to video call his wife

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்கக் கோரி ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 12ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு அமலில் உள்ளதால், நளினி - முருகன் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைதுறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை முருகனுக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்கக் கோரி ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 12ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு அமலில் உள்ளதால், நளினி - முருகன் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைதுறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை முருகனுக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...வாட்ஸ்அப்பில் பேசினால் அரசுக்கு என்ன பிரச்னை? - நீதிபதிகள் கேள்வி

Last Updated : Jun 12, 2020, 4:38 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.