ETV Bharat / state

கணவனின் சகோதரரை வெட்டிப்படுகொலை செய்த பெண் கைது

author img

By

Published : Feb 13, 2020, 10:03 AM IST

திருபத்தூர்: நிலத்தகராறில் கணவனின் சகோதரனை வெட்டிப் படுகொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

tirupattur murder news
திருபத்தூரில் சொத்து தகராறால் வெட்டிக் கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், முருகேசன் ஆகியோர். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்துவந்துள்ளது.

வெங்கடேசன் - சித்ரா தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசனும், மூன்று ஆண் குழந்தைகளும் இறந்துவிட்டனர். இதனால் சித்ரா தனது ஒரே மகளுடன் வறுமையில் வாடிவந்தார்.

இந்நிலையில், சித்ராவுக்கும் முருகேசனுக்குமிடையே நேற்று நள்ளிரவு மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிந்த நிலையில் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, சித்ரா திடீரென்று அரிவாளால் முருகேசனையும் அவரது மனைவி விஜயாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இச்சம்பவத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விஜயா வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தவந்து முருகேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சித்ராவை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், முருகேசன் ஆகியோர். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்துவந்துள்ளது.

வெங்கடேசன் - சித்ரா தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசனும், மூன்று ஆண் குழந்தைகளும் இறந்துவிட்டனர். இதனால் சித்ரா தனது ஒரே மகளுடன் வறுமையில் வாடிவந்தார்.

இந்நிலையில், சித்ராவுக்கும் முருகேசனுக்குமிடையே நேற்று நள்ளிரவு மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிந்த நிலையில் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, சித்ரா திடீரென்று அரிவாளால் முருகேசனையும் அவரது மனைவி விஜயாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இச்சம்பவத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விஜயா வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தவந்து முருகேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சித்ராவை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.