திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (25). இவர் தனது உறவினரான விஜயனுடன் சேர்ந்து பெரிய நிறுவனங்களில் இரும்புக் கூரை அமைக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த சந்தோஷ அவரது உறவினரான விஜயனின் ஐந்து வயது பெண் குழந்தையை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது கத்த முற்பட்ட சிறுமியை வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். அதன் பிறகு சிறுமி அவரது பாட்டியிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளது. பின்னர் குழந்தையை பெற்றோர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கந்திலி காவல் துறையினர் சந்தோஷை தேடி வந்தனர். அப்போது சந்தோஷ் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இருந்த மாமரத்தில் சட்டையை கழட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தோஷின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது