ETV Bharat / state

பாஜக தோல்விக்கு இந்துத்துவா கொள்கையே காரணம் - துரைமுருகன்

author img

By

Published : Feb 11, 2020, 8:29 PM IST

வேலூர்: இந்துத்துவாவை நுழைக்க முற்படுவதால்தான் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

dmk treasurer duraimurugan, திமுக பொருளாளர் துரைமுருகன்
dmk treasurer duraimurugan

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.16.45 கோடி மதிப்பில் புதிய விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ”சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை. அதுபோன்று டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை விட்டுவிடாமல் இருந்தால் நல்லது.

செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் மட்டும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாட்டில் இந்துத்துவாவை நுழைக்க பாஜக முயற்சி செய்வதால்தான் டெல்லி தேர்தலிலும் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அத்திக்காயை பிளந்தால் சொத்தை போல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடந்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியா?

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.16.45 கோடி மதிப்பில் புதிய விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ”சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை. அதுபோன்று டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை விட்டுவிடாமல் இருந்தால் நல்லது.

செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் மட்டும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாட்டில் இந்துத்துவாவை நுழைக்க பாஜக முயற்சி செய்வதால்தான் டெல்லி தேர்தலிலும் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அத்திக்காயை பிளந்தால் சொத்தை போல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடந்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியா?

Intro:வேலூர் மாவட்டம்

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது வழக்கமானது தான் - துரைமுருகன் பேட்டிBody:வேலூர்மாவட்டம், காட்பாடியில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.16.45 கோடி மதிப்பில் புதிய விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவர் துரைமுருகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் பணிகள் நடக்கும் இடத்தை ஆய்வு செய்தனர் அப்போது பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து கேட்ட போது, சட்டமன்றத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள் அதனை செயல்படுத்தவில்லை அதே போல் தான் இந்த அறிவிப்பும் அறிவிப்பு செயல் வடிவத்திற்கு வரட்டும் பார்க்கலாம் வரும் காலங்களில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்களையும் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்று தான் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் பாஜக அதிக இடங்களில் அபரிதமான வெற்றியை பெற்றார்கள் அதன் பின்னர் நடைபெற்ற எல்லா மாநில தேர்தல்களிலும் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது இட ஒதுக்கீடு பாதிக்கபடாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் அதே போல் டெல்லி தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளனர் டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது அத்திக்காயை பிளந்தால் சொத்தை போல் ஊழல் ஒவ்வொன்றாக வெளிவரதுவங்கியுள்ளது எல்லா துறைகளிலும் ஊழல் என்று கூறினார் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.