ETV Bharat / state

காட்டுக்குள் வேட்டையாடச் சென்றவர்களுக்குள் மோதல்; துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் பலி!

author img

By

Published : Oct 28, 2019, 2:02 PM IST

வேலூர்: ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த துளசிவேந்தனை

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட ஏழு பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் துளசிவேந்தனை, முள்வேலி மலைப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், நாட்டுத் துப்பாக்கியால் தலையில் சுட்டார். இதில் துளசிவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து துளசிவேந்தனின் சிறிய தந்தை திருக்குமரன்(45) அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். துளசிவேந்தனின் உடலை ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த துளசிவேந்தனை
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த துளசிவேந்தன்

பின்னர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சந்திரசேகருடன் மனோகர் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நான்குபேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ!

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட ஏழு பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் துளசிவேந்தனை, முள்வேலி மலைப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், நாட்டுத் துப்பாக்கியால் தலையில் சுட்டார். இதில் துளசிவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து துளசிவேந்தனின் சிறிய தந்தை திருக்குமரன்(45) அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். துளசிவேந்தனின் உடலை ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த துளசிவேந்தனை
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த துளசிவேந்தன்

பின்னர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சந்திரசேகருடன் மனோகர் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நான்குபேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ!

Intro:Body:வேலூர் மாவட்டம்

ஆம்பூர் அடுத்த ஒடுகத்தூர் ராசிமலை பகுதியில் மேல் அரசம்பட்டு,பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 வயதுடைய சிறுவர்கள் 5 பேர் உட்பட 7 பேர் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சென்று மிருகங்களை வேட்டையாட, சென்றுள்ளனர்,

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால், முள்வேலி மலை சேர்ந்த சந்திரசேகர் நாட்டு துப்பாக்கியால் சூடப்பட்டதில் மேல்அரசம்பட்டு பகுதியே சேர்ந்த சரவணன் மகன் துளசிவேந்தன் தலையில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.. இதுகுறித்து துளசி வேந்தனின் சித்தப்பா திருக்குமரன் (45) அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து துப்பாக்கியால் சூட்ட சந்திரசேகர் மற்றும் மனோகர் (38) ஆகிய இருவரையும் வேப்பங்குப்பம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

மேலும் தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.