ETV Bharat / state

வேலுரில் கார் மோதி சிறுமி உயிரிழப்பு!

author img

By

Published : Jul 23, 2020, 11:20 AM IST

வேலூர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது காரின் பின் பக்கம் மோதியதில், நான்கரை வயது சிறுமி சாரா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Girl killed in car crash in Vellore
Girl killed in car crash in Vellore

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் - கவிதா தம்பதியினர். தனியார் விடுதி ஒன்றில் செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி, வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்றிரவு (ஜுலை 22) சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஈசாக் என்பவர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத் தனது காரை பின்னால் எடுக்கும் போது, காரின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது எதிர்பாராதவிதமாக ஏறியதில், சாரா உட்பட இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்ட பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமி சாரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், காரை பறிமுதல் செய்து காரை இயக்கிய அதே பகுதியைச் சேர்ந்த ஈசாக் என்பவரை அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் - கவிதா தம்பதியினர். தனியார் விடுதி ஒன்றில் செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி, வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்றிரவு (ஜுலை 22) சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஈசாக் என்பவர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத் தனது காரை பின்னால் எடுக்கும் போது, காரின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது எதிர்பாராதவிதமாக ஏறியதில், சாரா உட்பட இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்ட பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமி சாரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், காரை பறிமுதல் செய்து காரை இயக்கிய அதே பகுதியைச் சேர்ந்த ஈசாக் என்பவரை அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.