ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மகள் - தந்தை தற்கொலை - Belonging to a different community

வேலூர்: காலில் விழுந்து கெஞ்சியும் கேட்காமல் காதலனுடன் சென்ற மகளால், அவமானம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

father sucide for doughters love
father sucide for doughters love
author img

By

Published : Jan 8, 2020, 8:23 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது இளைய மகள் திவிதா (19). இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கள் கிழமை முறையிட்டனர்.

அதனடிப்படையில் மேலப்பாடி காவல் துறையினர் நேற்று இருதரப்பு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினர். அப்போது திவிதாவின் தந்தை, ' தயவு செய்து என்னுடன் வந்து விடு ' என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தந்தையை காலில் தள்ளிவிட்டு, திவிதா தனது காதலனுடன் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ரவி, சோகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்பாடி காவல் துறையினர் ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்

பொதுவாக காதலுக்காக எதையும் இழக்க தயார் என்று கூறுவார்கள், ஆனால் இந்தப் பெண் காதலுக்காக தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தந்தையையே பறிகொடுத்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது இளைய மகள் திவிதா (19). இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கள் கிழமை முறையிட்டனர்.

அதனடிப்படையில் மேலப்பாடி காவல் துறையினர் நேற்று இருதரப்பு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினர். அப்போது திவிதாவின் தந்தை, ' தயவு செய்து என்னுடன் வந்து விடு ' என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தந்தையை காலில் தள்ளிவிட்டு, திவிதா தனது காதலனுடன் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ரவி, சோகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்பாடி காவல் துறையினர் ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்

பொதுவாக காதலுக்காக எதையும் இழக்க தயார் என்று கூறுவார்கள், ஆனால் இந்தப் பெண் காதலுக்காக தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தந்தையையே பறிகொடுத்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:வேலூர் மாவட்டம்

காதலனுக்காக தந்தையைப் பறிகொடுத்த இளம் பெண்

காலில் விழுந்து கெஞ்சியும் கேட்காமல் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள் : அவமானம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை வேலூர் அருகே நடந்த பரிதாபம்Body:வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை அடுத்த கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இளைய மகள் திவிதா(19) அதேபகுதியை சேர்ந்த ஷியாம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே பாதுகாப்பு வழங்க கோரி காதல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கள் கிழமை காதல் ஜோடி முறையிட்டனர். அதனடிப்படையில் மேலப்பாடி காவல்துறை நேற்று இருதரப்பு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினார் அப்போது திவிதாவின் தந்தை, காதல் வேண்டாம் மகளே, அது உன் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்னுடன் வந்து விடு, நான் உன்னை நல்ல இடத்தில் வாழ வைக்கிறேன் தயவு செய்து என்னுடன் வந்து விடு என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரவியை காலில் தள்ளிவிட்டு திவிதா தனது காதலனுடன் சென்றார். இதனால் மனமுடைந்த ரவி, யாரோ ஒருவனுக்காக பெற்ற மகளே காலால் எத்தி விட்டாரே என்ற சோகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து சென்ற மேல்பாடி போலீசார் ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் மகள் தன்னை காலால் எட்டி உதைத்து காதலனை கரம் பிடித்த காரணத்தால் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகம் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக காதலுக்காக எதையும் இழக்க தயார் என்று கூறுவார்கள் ஆனால் இந்த பெண் காதலுக்காக தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தந்தையையே பறிகொடுத்த சம்பவம் ஊர் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.