ETV Bharat / state

'ரூ.1 லட்சத்தைத் தாண்டிய வீட்டின் EB Bill..!' : அதிர்ச்சியில் குடும்பத்தினர்! - ஒரு லட்சத்தைத் தாண்டிய மின் கட்டணம்

வேலூர் மாவட்டம் அருகே மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் வீட்டிற்கு ரூ.1,60,642 மின் கட்டணம் வந்தது அந்தக் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ரூ.1 லட்சத்தைத் தாண்டிய வீட்டின் EB Bill..!' : அதிர்ச்சியில் குடும்பம்
'ரூ.1 லட்சத்தைத் தாண்டிய வீட்டின் EB Bill..!' : அதிர்ச்சியில் குடும்பம்
author img

By

Published : May 5, 2022, 5:30 PM IST

வேலூர்: வெறும் மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் நடுத்தரக் குடும்பத்தின் வீட்டில் வழக்கமாக 65 ரூபாய் முதல் 300 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்த நிலையில், இந்த மாத மின்கட்டணம் ரூ.1,60,642 என வந்து அக்குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

முத்து மண்டபம் பகுதி டோபி கானாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்டம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 24ஆவது வீட்டில் வசித்து வருபவர் ராணி அம்மாள். மொத்தம் 3 பேர் மட்டுமே வீட்டில் வசித்து வரும் சூழலில் கடந்த மாதம் ரூ.95 மின் கட்டணம் வந்துள்ளது.

ரூ.1லட்சத்தைத் தாண்டிய மின் கட்டணம்: இந்நிலையில், இந்த மாதத்துக்கான மின் அளவீடு நேற்று(மே 4) செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த மாதத்துக்கான கட்டணம் ரூ.1,60,642 என எழுதியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் இது குறித்து மின் கணக்கீட்டாளரிடம் கேட்டதற்கு "இந்த அளவுக்கு மீட்டர் ஓடியிருப்பதாகக் கூறி சென்றுள்ளார்". பின்னர் இது தொடர்பாக நேற்றே மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து இன்று(மே 5) சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் ராணி அம்மாள் வீட்டு மீட்டர் பாக்ஸை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரியத்து அலுவலர்கள் கூறுகையில், “ராணி அம்மாள் மீட்டரில் பழைய அளவு 1756ல் இருந்து திடீரென 26420-க்கு மின் அளவு மாறியுள்ளது. ஜம்ப் ஆகியுள்ளது (கிரீடிங்). இதன் காரணமாகவே மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் அளவு மாறியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

மீட்டர் தான் காரணம்..!: மேலும், ராணி அம்மாள் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் இன்று சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து புதிய மீட்டரை பொருத்தியுள்ளோம். மேலும் பழைய மீட்டரை எடுத்துச்சென்று மின் அளவு மாறியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்” எனக் கூறினர்.

அதேபோல் இந்த மாதம் ராணி அம்மாள் குடும்பத்தினர் எவ்வளவு மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பது குறித்து உரிய பழைய மீட்டரை ஆய்வு செய்தபிறகும், உயர் அலுவலர்களின் ஆலோசனைப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது' - சீமான் காட்டம்!



வேலூர்: வெறும் மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் நடுத்தரக் குடும்பத்தின் வீட்டில் வழக்கமாக 65 ரூபாய் முதல் 300 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்த நிலையில், இந்த மாத மின்கட்டணம் ரூ.1,60,642 என வந்து அக்குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

முத்து மண்டபம் பகுதி டோபி கானாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்டம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 24ஆவது வீட்டில் வசித்து வருபவர் ராணி அம்மாள். மொத்தம் 3 பேர் மட்டுமே வீட்டில் வசித்து வரும் சூழலில் கடந்த மாதம் ரூ.95 மின் கட்டணம் வந்துள்ளது.

ரூ.1லட்சத்தைத் தாண்டிய மின் கட்டணம்: இந்நிலையில், இந்த மாதத்துக்கான மின் அளவீடு நேற்று(மே 4) செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த மாதத்துக்கான கட்டணம் ரூ.1,60,642 என எழுதியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் இது குறித்து மின் கணக்கீட்டாளரிடம் கேட்டதற்கு "இந்த அளவுக்கு மீட்டர் ஓடியிருப்பதாகக் கூறி சென்றுள்ளார்". பின்னர் இது தொடர்பாக நேற்றே மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து இன்று(மே 5) சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் ராணி அம்மாள் வீட்டு மீட்டர் பாக்ஸை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரியத்து அலுவலர்கள் கூறுகையில், “ராணி அம்மாள் மீட்டரில் பழைய அளவு 1756ல் இருந்து திடீரென 26420-க்கு மின் அளவு மாறியுள்ளது. ஜம்ப் ஆகியுள்ளது (கிரீடிங்). இதன் காரணமாகவே மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் அளவு மாறியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

மீட்டர் தான் காரணம்..!: மேலும், ராணி அம்மாள் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் இன்று சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து புதிய மீட்டரை பொருத்தியுள்ளோம். மேலும் பழைய மீட்டரை எடுத்துச்சென்று மின் அளவு மாறியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்” எனக் கூறினர்.

அதேபோல் இந்த மாதம் ராணி அம்மாள் குடும்பத்தினர் எவ்வளவு மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பது குறித்து உரிய பழைய மீட்டரை ஆய்வு செய்தபிறகும், உயர் அலுவலர்களின் ஆலோசனைப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது' - சீமான் காட்டம்!



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.