ETV Bharat / state

வாணியம்பாடி மக்களின் பிரச்னை எனக்கு தெரியாது; கைவிரித்த துரைமுருகன்; அதிர்ச்சியில் வேலூர் மக்கள்!

author img

By

Published : Sep 18, 2019, 9:25 PM IST

வேலூர்: மண்ணின் மைந்தர் என்று கூறி அரசியல் செய்து வரும் துரைமுருகன், வாணியம்பாடி மக்களின் பிரச்னை குறித்து எதுவும் தெரியாது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன்

வேலூர் மாவட்டம் என்றாலே திமுகவின் கோட்டை என்பதுதான் பலரது நினைவுக்கும் வரக்கூடும். இங்கு நடைபெறும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெறுவது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்கூட வேலூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதற்கு திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துரைமுருகன்தான் முக்கிய காரணம் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

காட்பாடி பகுதியில் வசித்து வரும் துரைமுருகன், அந்த தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். வேலூர் மாவட்ட மக்களும் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் நம்பிக்கையுடன் இன்றளவும் அவருக்கு வாக்களித்துவருகின்றனர்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த நிலையில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக உள்ள துரைமுருகன், நேற்றும் இன்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாணியம்பாடியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் மக்கள் பிரச்சனையான நியூ டவுன் மேம்பாலம் பிரச்னை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறியது வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

அரசு சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களில் தலைவராக உள்ள துரைமுருகன், அரசியல் செய்வது போல் நடந்து கொள்வது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தான் இந்த மண்ணில் பிறந்தவன் என்றும், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும் என்று கூறி மகனுக்கு வாக்கு சேகரித்துவிட்டு, தற்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் நிலவி வரும் மக்கள் பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று துரைமுருகன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, திமுக மேலிடத்துடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி மகனை எம்.பி ஆக்கியது மட்டுமின்றி, தெற்கு ரயில்வே எம்.பி.க்கள் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், துரைமுருகனின் இந்த சர்ச்சை பேச்சு பொதுமக்கள் மட்டுமன்றி, திமுகவினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

வேலூர் மாவட்டம் என்றாலே திமுகவின் கோட்டை என்பதுதான் பலரது நினைவுக்கும் வரக்கூடும். இங்கு நடைபெறும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெறுவது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்கூட வேலூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதற்கு திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துரைமுருகன்தான் முக்கிய காரணம் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

காட்பாடி பகுதியில் வசித்து வரும் துரைமுருகன், அந்த தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். வேலூர் மாவட்ட மக்களும் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் நம்பிக்கையுடன் இன்றளவும் அவருக்கு வாக்களித்துவருகின்றனர்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த நிலையில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக உள்ள துரைமுருகன், நேற்றும் இன்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாணியம்பாடியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் மக்கள் பிரச்சனையான நியூ டவுன் மேம்பாலம் பிரச்னை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறியது வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

அரசு சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களில் தலைவராக உள்ள துரைமுருகன், அரசியல் செய்வது போல் நடந்து கொள்வது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தான் இந்த மண்ணில் பிறந்தவன் என்றும், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும் என்று கூறி மகனுக்கு வாக்கு சேகரித்துவிட்டு, தற்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் நிலவி வரும் மக்கள் பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று துரைமுருகன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, திமுக மேலிடத்துடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி மகனை எம்.பி ஆக்கியது மட்டுமின்றி, தெற்கு ரயில்வே எம்.பி.க்கள் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், துரைமுருகனின் இந்த சர்ச்சை பேச்சு பொதுமக்கள் மட்டுமன்றி, திமுகவினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Intro:வேலூர் தேர்தலில் மண்ணின் மைந்தர் என்று கூறி மகனை வெற்றி பெற செய்த துரைமுருகன் - அரசு ஆய்வு கூட்டத்தின்போது வாணியம்பாடி மக்களின் பிரச்சினை குறித்து எதுவும் தெரியாது என கூறியதால் சர்ச்சை - வேலூர் மாவட்ட பொதுமக்கள் அரசியல் கட்சியினர் அதிர்ச்சிBody:தமிழக அரசியல் களத்தில் வேலூர் மாவட்டம் என்றாலே பெரும்பாலும் திமுகவின் கோட்டையாகவே தற்போது வரை இருந்து வருகிறது அதாவது இங்கு நடைபெறும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெறுவது வழக்கம் அதன்படி சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட வேலூரில் உள்ள இரண்டு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் இதற்கு முக்கிய காரணம் திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துரைமுருகன் என்றே கூறலாம் துரைமுருகன் காட்பாடி பகுதியில் வசித்து வருகிறார் அதன்படி காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அவர் தொடர்ந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வருகிறார் அரசியல் களத்திலும் சரி கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி பொது நிகழ்ச்சிகளிலும் துரைமுருகனை வேலூர் மாவட்ட திமுகவினர் "மண்ணின் மைந்தர்" "காட்பாடி யார்" என்றும் பல்வேறு பெயர்களில் வசித்து வருகின்றனர் வேலூர் மாவட்ட பொதுமக்களும், ஒரு மூத்த அரசியல்வாதி வயதில் மூத்தவர் என்ற அடிப்படையில் துரைமுருகனை நம்பி இன்றளவும் அவருக்கு வாக்களித்து வருகின்றனர் இந்த நிலையில் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவராக உள்ள துரைமுருகன் நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது பேட்டியளித்த அவர், வாணியம்பாடியில் நீண்ட நாள் நிலவி வரும் மக்களின் பிரச்சனையான நியூ டவுன் மேம்பாலம் பிரச்சினை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறிய சம்பவம் வேலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதாவது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் நிலோபர் கபில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் எனவே அரசியல் ரீதியாக துரைமுருகன் வாணியம்பாடி பிரச்சனை குறித்து தனக்கு தெரியாது என்று பதில் கூறியதாக தெரிகிறது அரசு சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களில் தலைவராக உள்ள துரைமுருகன் அரசியல் செய்வது போல் நடந்து கொள்வது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பாக வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் முதலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது இந்த தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார் தனது மகனை வெற்றி பெற செய்வதற்காக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை குடியாத்தம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று, நான் இந்த மண்ணில் பிறந்தவன் எனக்கு உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தெரியும் எனவே எனது மகன் மூலம் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்னை நம்புங்கள் என்று துரைமுருகன் வாக்குறுதி கொடுத்தார் ஆனால் தற்போது தேர்தல் முடிந்து தனது மகன் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் இந்த சமயத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் நிலவி வரும் மக்கள் பிரச்சினை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று துரைமுருகன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக தனக்கு அனைத்தும் தெரியும் என்பதுபோல் பேசிவிட்டு தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்கள் பிரச்சினை பற்றி தெரியாது என பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே துரைமுருகன் தனது மகனை கட்சியின் மேலிட சிபாரிசு மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கியதுடன் தெற்கு ரயில்வே எம்பிக்கள் குழு தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் மூலம் துரைமுருகன் வாரிசு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வேலூர் மாவட்ட திமுகவினர் மட்டுமன்றி தமிழகம் முழுதுமுள்ள திமுகவினர் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது இது போன்ற சூழ்நிலையில் துரைமுருகனின் இந்த கருத்து பொதுமக்கள் மட்டுமன்றி திமுகவினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.