திருப்பத்தூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் ராம். இவர் தங்க நகைகளை மொத்த விலைக்கு வாங்கி அதனை சில்லறை விற்பனை செய்துவருகிறார். இந்நிலையில் இவர் இன்று மாலை ஆம்பூர் பஜார் பகுதியிலிருந்து ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.65,000 ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு தனது நண்பருடன் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளுக்கு விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருவரும் மாதனூரையடுத்த அகரம் எல்லப்பன்பட்டி கெங்கையம்மன் கோயிலருகில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் மிளகாய் பொடியை அவர்கள் மீது தூவி ஒரு கிலோ தங்க நகை, ரூ.65,000 ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஓம் ராம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 50 சவரன் தங்க நகைகள் மாயம் - சேலத்தில் தொடரும் கைவரிசை!