ETV Bharat / state

சென்னை விமான சாகசம்: "நெரிசலில் 5 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் வேதனையளிக்கிறது" - இபிஎஸ் கண்டனம்! - chennai air show

விமானப்படை வான் சாகச நிகழ்ச்சிக்கு திமுக அரசு முறையான பாதுகாப்பு செய்து கொடுக்க தவறிவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

எடப்பாடி பழனிசாமி மற்றும் மெரினாவிம் மயக்கம் அடைந்தவரை தூக்கி செல்லும் படம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் மெரினாவிம் மயக்கம் அடைந்தவரை தூக்கி செல்லும் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. விடுமுறை தினம், சென்னையில் நடக்கும் மிகப்பெரிய விமான நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், காலை முதலே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில் மெரினா கடற்கரையில் திரண்டனர்.

5 பேர் உயிரிழந்தாதாக வரும் செய்திகள்: சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசல், வெயிலின் தாக்கம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தி கொடுக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம்" என குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்வாகச் சீர்கேடு: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்: 4 பேர் மரணம்; 230-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாக சீர்கேடே உருவான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள்" என தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் ஆட்சி: இதே போல் இந்நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல் துறையினருக்கு அதிக வேலையும், அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. விடுமுறை தினம், சென்னையில் நடக்கும் மிகப்பெரிய விமான நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், காலை முதலே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில் மெரினா கடற்கரையில் திரண்டனர்.

5 பேர் உயிரிழந்தாதாக வரும் செய்திகள்: சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசல், வெயிலின் தாக்கம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தி கொடுக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம்" என குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்வாகச் சீர்கேடு: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்: 4 பேர் மரணம்; 230-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாக சீர்கேடே உருவான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள்" என தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் ஆட்சி: இதே போல் இந்நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல் துறையினருக்கு அதிக வேலையும், அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.