ETV Bharat / state

'உரங்களின் விலை, ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை! - farmers interactive session at vellore

வேலூர்: உரங்களின் விலையையும், ஜிஎஸ்டி வரியையும் குறைக்க வேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பாராளுமன்ற நிலைக்குழுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
பாராளுமன்ற நிலைக்குழுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
author img

By

Published : Jan 24, 2020, 5:11 PM IST

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு சார்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட விவசாயிகளுடன் ஒருங்கிணைந்த கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, நிலைக்குழு தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், கதிர் ஆனந்த், உள்பட 9 எம்.பி.க்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் , வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ’இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும், உரத்துக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிககி வைத்தனர்.

பாராளுமன்ற நிலைக்குழுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்நிலையில், ஆலங்காயத்தை சேர்ந்த விவசாயி சின்னத்துரை(70) பேசுகையில், "விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை அலுவலர்கள் அமைச்சர்கள் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று பேசிவிட்டு செல்கின்றனர் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. உங்களிடம் ரூ. 100 கோடி பணம் இருந்தாலும் அதை நீங்கள் உண்ண முடியாது விவசாயம் செய்தால்தான் சோறு சாப்பிட முடியும். எனவே, விவசாயிகளுக்கு 100% விவசாய அட்டை வழங்க வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, " நிச்சயம் உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி அளித்தார்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், " இங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது நிச்சயமாக விவசாயிகள் முன்வைத்த பிரச்னைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கும் கொடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் கொள்முதலில் 1,480 கோடி ஊழல் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு சார்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட விவசாயிகளுடன் ஒருங்கிணைந்த கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, நிலைக்குழு தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், கதிர் ஆனந்த், உள்பட 9 எம்.பி.க்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் , வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ’இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும், உரத்துக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிககி வைத்தனர்.

பாராளுமன்ற நிலைக்குழுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்நிலையில், ஆலங்காயத்தை சேர்ந்த விவசாயி சின்னத்துரை(70) பேசுகையில், "விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை அலுவலர்கள் அமைச்சர்கள் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று பேசிவிட்டு செல்கின்றனர் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. உங்களிடம் ரூ. 100 கோடி பணம் இருந்தாலும் அதை நீங்கள் உண்ண முடியாது விவசாயம் செய்தால்தான் சோறு சாப்பிட முடியும். எனவே, விவசாயிகளுக்கு 100% விவசாய அட்டை வழங்க வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, " நிச்சயம் உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி அளித்தார்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், " இங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது நிச்சயமாக விவசாயிகள் முன்வைத்த பிரச்னைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கும் கொடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் கொள்முதலில் 1,480 கோடி ஊழல் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

Intro:வேலூர் மாவட்டம்

உரங்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். நூறு கோடி ரூபாய் வைத்திருந்தாலும் அதை நம்மால் உண்ண முடியாது எனவே விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் - பாராளுமன்ற நிலைக்குழு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை
Body:மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் பாராளுமன்ற நிலைக்குழு வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வேலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது இதில் நிலைக்குழு தலைவரும் திமுக பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார் கதிர் ஆனந்த் உள்பட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தனர் குறிப்பாக விவசாயத்திற்கான உரங்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவே உரங்களின் விலையை குறைக்க வேண்டும், உரத்துக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் குறிப்பாக பெண் விவசாயி வாசுகி என்பவர் பேசிகையில், உரங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுகிறது எனவே உரங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதைத்தொடர்ந்து ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த விவசாய சின்னத்துரை(70) என்பவர் பேசுகையில் விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை அதிகாரிகள் அமைச்சர்கள் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று பேசிவிட்டு செல்கின்றனர் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை விவசாயம் தரைமட்டமாகி விட்டது இன்னும் 20 ஆண்டுகளில் விவசாயி சோறு திங்க முடியாது உங்களிடம் 100 கோடி பணம் இருந்தாலும் அதை நீங்கள் உண்ண முடியாது விவசாயம் செய்தால் தான் சோறு சாப்பிட முடியும் எனவே விவசாயத்தை காப்பாற்ற முன்வரவேண்டும், விவசாயிகளுக்கு 100% விவசாய அட்டை வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார் இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, நிச்சயம் உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார் மேலும் அவர் பேசுகையில் இது ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் எனவே இது தொடர்பான பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும் இருப்பினும் விவசாயிகள் நீங்கள் முன்வைக்கும் பிற கோரிக்கைகளையும் நாங்கள் மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்போம் என்று தெரிவித்தார் இதேபோல் நிலைக்குழுவில் வடமாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததால் விவசாயி ஒருவர் இந்தி மொழியில் பேசி விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தார் இதை வட மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமுடன் கேட்டனர் நிகழ்ச்சிக்கு பின்னர் நிலைக்குழு தலைவர் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், இங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதற்காக தான் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது நிச்சயமாக விவசாயிகள் முன்வைத்த பிரச்சனைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கும் கொடுப்போம் விவசாயிகளை சந்திப்பது இதுதான் முதல் கூட்டம் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்போம் என்று தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.