ETV Bharat / state

பணப்பட்டுவாடா புகார்: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Apr 24, 2019, 1:37 PM IST

வேலுர்: வாட்ஸ்அப் வீடியோவால் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

admk

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையின்போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.

இதற்கிடையே தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சியினருடன் உரையாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகன், நீதிமன்ற அனுமதி பெற்று சம்பத்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது சம்பத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

vellore

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையின்போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.

இதற்கிடையே தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சியினருடன் உரையாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகன், நீதிமன்ற அனுமதி பெற்று சம்பத்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது சம்பத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

vellore
Intro: வாட்ஸ் அப் வீடியோவால் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய விவகாரம்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு


Body:வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன இதில் வருமான வரித்துறை சோதனையின்போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது வாக்காளர்களுக்கு அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது இதற்கிடையில் தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சியினருடன் உரையாடுவது போன்ற வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோ விவகாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மீது இன்று வாணியம்பாடி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் அதாவது இந்த பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகன் சம்பத்குமார் மீது நீதிமன்ற அனுமதி பெற்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது சம்பத் குமார் மீது 171இ மற்றும் 171 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்


Conclusion:வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.