வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீமத் பகவத் கீதை பாராயண போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பகவத் கீதையின் சுலோகங்களைச் சொல்லி சிறப்புகளை எடுத்துரைத்தனர். மேலும், எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையில் பாராயண போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளி காசு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கபட்டது. பரிசுகளை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து பெற்றுச் சென்றனர்.
இதையும் படிக்க: காது கேட்காத குழந்தை தாயின் குரலை முதன்முதலாகக் கேட்கும் க்யூட் காணொலி!