ETV Bharat / state

வேலூர்: தீ விபத்தில் உயிரிழந்த பசுக்கள்...! - Vellore

வேலூர்: திடீரென மாட்டுத்தொழுகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பசு மாடுகளும், 2 கன்றுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

author img

By

Published : Apr 14, 2019, 11:58 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் தேவன். விவசாயியான இவர் அதே பகுதியில் பல வருடங்களாக மீன் பண்ணை மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை இவரது மாட்டுத்தொழுவம் மேலே செல்லும் மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டது. ஓலைகளால் கட்டப்பட்ட தொழுவத்தின் மீது தீப்பொறிகள் விழுந்ததால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அதிகமாக வீசிய காற்றினால் 2 நிமிடங்களுக்குள் தீ மளமளவென தொழுவம் முழுவதும் பரவியது.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுவதும் பரவியதால் தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டுருந்த இரண்டு கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் தேவன். விவசாயியான இவர் அதே பகுதியில் பல வருடங்களாக மீன் பண்ணை மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை இவரது மாட்டுத்தொழுவம் மேலே செல்லும் மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டது. ஓலைகளால் கட்டப்பட்ட தொழுவத்தின் மீது தீப்பொறிகள் விழுந்ததால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அதிகமாக வீசிய காற்றினால் 2 நிமிடங்களுக்குள் தீ மளமளவென தொழுவம் முழுவதும் பரவியது.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுவதும் பரவியதால் தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டுருந்த இரண்டு கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

Intro: ஆம்பூர் அருகே மாட்டுத்தொழுகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கன்று,2 பசு மாடு உயிரிழப்பு.

மேலும் 2 பசு மாடுகள் 70% தீ காயங்களுடன் மீட்க பட்டது.


Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் தேவன்.

விவசாயியான இவர் அதே பகுதியில் பல வருடங்களாக மீன் பண்ணை மற்றும் மாடுகள் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை இவரது மாட்டுத்தொழுவம் மேலே செல்லும் மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டது ஓலைகளால் கட்டப்பட்ட தொழுவத்தின் மீது தீப்பொறிகள் விழுந்ததால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இந்நேரத்தில் காற்று அதிகமாக வீசியதால் 2 நிமிடங்களுக்குள் தீ மளமளவென தொழுவம் முழுவதும் பரவியது.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுவதும் பரவியதால் தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டுருந்த இரண்டு கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் தீயில் கருகி உயிரிழந்தது. மேலும் அப்பகுதிமக்கள் தீயை போராடி அணைத்தனர் இதனால் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பசு மாடுகளை பலத்த தீ காயத்துடன் மீட்டு அவர்களே சிகிச்சை அளித்தனர்.




Conclusion: மேலும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியானது ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.

ஆனால் இரயில்வே நிர்வாகம் மேம்பாலம் அருகே இரும்பு கம்பிகாளால் தடுப்பு வேலி அமைத்ததால் தீயணைப்பு வாகனம் வருவதில் சிக்கல் ஏற்பட்டு 4 உயிரினங்கள் உயிரிழந்துள்ளது இதே நிலை மனிதர்களுக்கு ஏற்படுவதற்குள் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.