வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்ப்பட்ட 29 ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .
இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு பத்தாயிரத்து 625 புதிய உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அட்டைகள், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர், உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுகவின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதையும் படிங்க : முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் தந்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்திய டிடிவி தினகரன்!