ETV Bharat / state

மகனுக்கு வாய்ப்பளித்தது ஏன்? - துரைமுருகனுக்கு ஏ.சி.சண்முகம் கேள்வி!

author img

By

Published : Mar 18, 2019, 10:02 PM IST

வேலூர்: "கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது மகனை போட்டியிட வைப்பது ஏன்" என்று, திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு ஏ.சி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

துரைமுருகனுக்கு ஏ.சி.சண்முகம் கேள்வி

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏசி சண்முகம், "தனது கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். திமுக பொருளாளர் துரைமுருகன் 60 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் உள்ளவர். இந்தத் தேர்தலில் அவரது மகனை போட்டியிட வைக்கிறார். திமுகவில் எவ்வளவோ மூத்த நிர்வாகிகள் உள்ளபோது அவரது மகனை போட்டியிட வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏசி சண்முகம், "தனது கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். திமுக பொருளாளர் துரைமுருகன் 60 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் உள்ளவர். இந்தத் தேர்தலில் அவரது மகனை போட்டியிட வைக்கிறார். திமுகவில் எவ்வளவோ மூத்த நிர்வாகிகள் உள்ளபோது அவரது மகனை போட்டியிட வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Intro:துரைமுருகன் குடும்ப அரசியல் செய்கிறார் கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது மகனை போட்டியிட வைப்பது ஏன் ஏசி சண்முகம் கேள்வி


Body:தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அதேபோல் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது இந்த நிலையில் ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போல் புதிய நீதிக்கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது இதுதொடர்பாக வேலூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஏசி சண்முகம், "தனது கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுவதாக அறிவித்தார் அப்போது பேசிய அவர், " திமுக பொருளாளர் துரைமுருகன் குடும்ப அரசியலில் ஈடுபட்டதாகவும் வேலூரில் எவ்வளவோ மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது தனது மகனை போட்டியிட வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பத்ரிக்கையாளர் சந்திப்பில் சண்முகம் கூறியதாவது;

வேலூர் தொகுதியில் ஏ சி சண்முகம் ஆகிய நான் போட்டியிட வேண்டுமென கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன். அமைச்சர் கே சி வீரமணி இன்று கலந்துகொண்டு தேர்தல் பொறுப்பை ஏற்றுள்ளார் கடந்த முறை வேலூர் தொதியில் நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன். அப்போது அதிமுக சார்பில் தேர்தல் பணியை மேற்கொண்டிருந்த அமைச்சர் கே சி வீரமணி அக்கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தார் இந்த முறை அமைச்சர் கே சி வீரமணியே தலைமையேற்று எங்களுக்கு தேர்தல் பணி ஆற்ற உள்ளதால் அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் அதிமுக தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தபோது அதை ஏற்றுக்கொண்டு தாய் வீட்டு சீதனம் போல் எனக்கு இருட்டை இலை கிடைத்துள்ளது ஏற்கனவே நான் 1950ல் எம்ஜிஆர் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். 1984ல் இதே இரட்டை இலை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானேன்.வேலூர் தொகுதிக்கு பாமக தலைவர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வர உள்ளனர் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து வேலூர் தொகுதியில் ஆம்பூர் குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது எனவே அதிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் குறிப்பாக வேட்பாளர் அறிவிப்பதில் மூன்று மாதங்களுக்கு முன்பே நான் இங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என அமைச்சர் கே சி வீரமணி தான் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தார் எனவே அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்

தொடர்ந்து திமுக வேட்பாளரும், திமுக பொருளாளர் மகனுமான கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடையும் என தெரிவித்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்யனர். அதற்கு ஏ.சி.சண்முகம், " துரைமுருகன் 60 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் உள்ளவர். இந்தத் தேர்தலில் அவரது மகனை போட்டியிட வைக்கிறார் திமுகவில் எவ்வளவோ மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது அவரது மகனை போட்டியிட வைப்பது ஏன் என அக்கட்சியினரே சிலர் பேசுவதாக கேள்விப்பட்டேன் என்றார் தொடர்ந்து அதிமுகவிலும் ஓபிஎஸ் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாரே என நிருபர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே சி வீரமணி, "ஓபிஎஸ் மகன் கட்சியின் இளைஞர் அணி இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நீண்டகாலமாக இருந்திருக்கிறார் அவரது அப்பா ஒரு பக்கம் இவர் ஒரு பக்கம் என தனித்தனியாக இரண்டு பேரும் கட்சிக்காக உழைத்து வருகின்றனர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர் திமுகவில் கட்சிக்கே சம்பந்தமில்லாதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் திமுகவில் இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இது நடக்கிறது என கடுமையாக குற்றம் சாட்டினார்


Conclusion:வேட்பு மனு தாக்கல் எப்போது செய்வேன் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.