ETV Bharat / state

உத்திரகாவேரி ஆற்றில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 4, 2021, 9:16 PM IST

வேலூர்: உத்திரகாவேரி ஆற்றில் குளிக்கச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

uthirakaveri river
உத்திரகாவேரி ஆறு

வேலூர் மாவட்டம் ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரின் மகன் யுவராஜ் (14) ஒடுகத்தூர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது, யுவராஜ் உட்பட இரண்டு பேர் நீருக்குள் மூழ்குவதை பார்த்த மற்றொரு நண்பர், கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நீரில் தத்தளித்து கொண்டிருந்த ஒரு மாணவனை காப்பாற்றியுள்ளனர். யுவராஜ் கிடைக்காததால், ஒடுகத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி யுவராஜை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு - இருவர் கைது

வேலூர் மாவட்டம் ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரின் மகன் யுவராஜ் (14) ஒடுகத்தூர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது, யுவராஜ் உட்பட இரண்டு பேர் நீருக்குள் மூழ்குவதை பார்த்த மற்றொரு நண்பர், கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நீரில் தத்தளித்து கொண்டிருந்த ஒரு மாணவனை காப்பாற்றியுள்ளனர். யுவராஜ் கிடைக்காததால், ஒடுகத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி யுவராஜை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.